டெல்லியில் நடந்த கலவரம் குண்டர்களால் நடத்தப்பட்டது.. இயக்குநர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: டெல்லி கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள பல பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

கூட்டாக சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் இன்று சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

குண்டர்கள்தான்
அப்போது பேசிய அமீர் டெல்லியில் ஏற்பட் கலவரம் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த குண்டர்களால்தான் நடந்தது என குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, டெல்லியில் நடைபெற்றது இந்து - முஸ்லிம் கலவரம் அல்ல. குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. 11 மாநிலங்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அவசியம் இல்லை
ஏப்ரலில் என்ஆர்சி கணக்கெடுப்பு தொடங்கும் போது இதன் பாதிப்புகள் புரியும். நாடு அமைதியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். குடியுரிமை சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. டெல்லி போல தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. சிஏஏ பற்றி புரியாமல் அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது.

முதல்வர் விளக்க வேண்டும்
தீய சக்திகள் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் முதல்வர் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது? சிஏஏ குறித்து போராட்டம் நடத்துபவர்களிடம் முதல்வர் விளக்க வேண்டும். இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications