டெல்லியில் நடந்த கலவரம் குண்டர்களால் நடத்தப்பட்டது.. இயக்குநர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: டெல்லி கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள பல பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

கூட்டாக சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் இன்று சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

குண்டர்கள்தான்
அப்போது பேசிய அமீர் டெல்லியில் ஏற்பட் கலவரம் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த குண்டர்களால்தான் நடந்தது என குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, டெல்லியில் நடைபெற்றது இந்து - முஸ்லிம் கலவரம் அல்ல. குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. 11 மாநிலங்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அவசியம் இல்லை
ஏப்ரலில் என்ஆர்சி கணக்கெடுப்பு தொடங்கும் போது இதன் பாதிப்புகள் புரியும். நாடு அமைதியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். குடியுரிமை சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. டெல்லி போல தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. சிஏஏ பற்றி புரியாமல் அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது.

முதல்வர் விளக்க வேண்டும்
தீய சக்திகள் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் முதல்வர் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது? சிஏஏ குறித்து போராட்டம் நடத்துபவர்களிடம் முதல்வர் விளக்க வேண்டும். இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications