Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானும் சினமாக்காரர்தான்.. மறந்துடாதீங்க.. விஜய் ஆண்டனியை சீண்டிய நாம் தமிழர்.. விளாசிய நவீன்!

வந்தாரை வாழ வைக்கும் மாநிலத்தில் இப்படி கருத்துக்கள் வைக்கப்படலாமா என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடஇந்தியர்கள் குறித்து நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து உள்ளது. இது தொடர்பாக ஏர்போர்ட் மூர்த்தி பேசிய கருத்து ஒன்று சர்ச்சையாகி உள்ளது.

தமிழ்நாடடில் கடந்த சில மாதங்களாக வடஇந்தியர்கள் வருகை அதிகரித்து வருகிறது. வடஇந்தியாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு பலர் வேலைக்கு வர தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்களும் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளன.

வடஇந்தியர்கள்

வடஇந்தியர்கள்

இந்த மொத்த விஷயமும் இரண்டு விதமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. ஒன்று வடஇந்தியர்கள் வருகை தவறு. அவர்கள் தமிழ்நாடு வந்து தமிழர்களின் வேலைகளை பறிக்கிறார்கள். குறைந்த கூலிக்கு வேலை பார்த்து தமிழர்களின் வேலைகளை பறிக்கிறார்கள். அதே சமயம் நமது கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களை அனுமதிக்க கூடாது. நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இது நம்முடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆதரவு

ஆதரவு

இன்னும் சிலரோ.. டெல்லி முழுக்க தமிழர்கள் இருக்கிறார்கள். மும்பையில் தமிழர்கள் இருக்கிறார்கள். கொல்கத்தாவில் பல கடைகளை தமிழர்களே நடத்துகிறார்கள். பெங்களூரில் வைட் பீல்ட் முழுக்க தமிழர்களே நிறைந்து இருக்கிறார்கள். அடித்தட்டு வேலை தொடங்கி ஐடி வேலை வரை பார்க்கிறார்கள். நாம் பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் பிற மாநில மக்கள் நம் ஊருக்கு வந்தால் என்ன தப்பு? என்ற வாதமும் வைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன தமிழ் சமூகம் இப்படி பேசுவது சரியா.. வந்தாரை வாழ வைக்கும் மாநிலத்தில் இப்படி கருத்துக்கள் வைக்கப்படலாமா என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

இந்த நிலையில்தான் வடஇந்தியர்கள் வருகை தவறு இல்லை என்று கூறும் வகையில் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர், என்று குறிப்பிட்டு இருந்தார். நாம் தமிழர் கட்சியினர் பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வடஇந்தியர்கள் வருகையை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சியினர் விஜய் ஆண்டனி கருத்தை எதிர்க்கிறார்கள்.

என்ன சொன்னார்கள்?

என்ன சொன்னார்கள்?

நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஏர்போர்ட் மூர்த்தி இது தொடர்பாக பேசிய கருத்துக்கள்தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. விஜய் ஆண்டனி சினிமாக்காரர். அவருக்கு தாய் அக்கா தங்கை, பக்கத்துக்கு வீட்டு பொண்ணு, எதிர் வீட்டு பொண்ணு எல்லாம் ஒன்றுதான். அவனுக்கு தேவை அதுதான். அதுதான் எல்லோரிடமும் இருக்கிறதே. அவர் எல்லோரிடமும் போவார். நாம் போக மாட்டோம் என்று இழிவாக கருத்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்திற்கு இயக்குனர் நவீன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இதுதான் நாதகவின் தரமா? அண்ணன் சீமானும் ஒரு சினிமாகாரர்தான் என்பதை மறந்துவிடாதீர். முதலில் மனிதராக மாறுங்கள். பிறகு தமிழர்களுக்காக கட்சி நடத்துங்கள். இந்த தரம்தாழ்ந்த பேச்சிற்காக விஜய் ஆண்டனியிடம் மன்னிப்பு கேளுங்கள், என்று கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+