விடியல் ஆட்சியிலும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை-திமுக அரசு மீது நக்கலுடன் பா.ரஞ்சித் சாடல்
சென்னை: திமுகவின் விடியல் ஆட்சியிலும் சென்னை பூர்வகுடிகள் மீது அடக்குமுறை ஏவப்படுக்கிறதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும் வருகிறார். தமது படைப்புகள் மூலமாக மட்டுமல்ல சமூக பிரச்சனைகளிலும் பா.ரஞ்சித் தமது குரலை பதிவு செய்து வருகிறார்.

இளையராஜா விவகாரம்
அண்மையில் இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியை அண்ணல் அம்பேதக்ருடன் ஒப்பிட்டு நூல் ஒன்றுக்கு முன்னுரை எழுதி இருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேநேரத்தில் இளையராஜாவை ஜாதிய அடிப்படையில் சிலரும் விமர்சித்தனர். இதற்கு பா.ரஞ்சித் கடும் எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார். இது விவாதப் பொருளானது. குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளையராஜா மீதான விமர்சனத்தை உக்கிரமாக எதிர்த்

இந்தி சர்ச்சை
இந்தி தேசிய மொழி என்பது தொடர்பான சர்ச்சையில் தமிழ் மொழிதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற ஆணித்தரமாக கூறினார். அத்துடன் இந்தியாவில் திராவிடர்கள் மதிக்கப்பட வேண்டும்; திராவிடர்களாக அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் பா.ரஞ்சித் கூறியிருந்தார். இந்த கருத்துகள் பரவலான வரவேற்பையும் பெற்றன.

திமுக அரசு ஓராண்டு நிறைவு
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. திமுக அரசின் முதலாம் ஆண்டு நிறைவு வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

பா.ரஞ்சித் ட்வீட்
இந்த விமர்சனங்களுடன் பா.ரஞ்சித்தும் தமது ட்விட்டரில் திமுக அரசை கிண்டலடித்தும் காட்டமாக சாடியும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பா.ரஞ்சித் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே? என கேள்வி எழுப்பியுள்ளார் பா.ரஞ்சித்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications