நெஞ்சம் உடைந்து சிதறியது.. கண்ணீர் விட்ட செல்வராகவன்.. உலக கோப்பை தோல்வி குறித்து உருக்கம்!
சென்னை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து இயக்குநர் செல்வராகவன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதும் அட்டகாசமாக ஆடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று ரசிகர்களின் இதயங்களை உடைத்தது. 2003க்குப் பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஏக்கத்தை இந்தியா தீர்க்கும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி நிச்சயம் என்று எதிர்பார்த்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பலரும் தங்கள் ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், பல திரை பிரபலங்களும் இந்திய அணி தோல்வியடைந்ததை பற்றி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் தோல்வியால் அழுததாக இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications