ஒளி ஏற்றியவர்.. ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் அப்படி பேசியிருக்க கூடாது! வாய்ஸ் கொடுத்த தங்கர் பச்சான்.!
சென்னை: அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது என கூறியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.
சென்னை எழில் நகரில் மக்கு நாமே திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர்.

அப்போது, அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்து உள்ளாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அளித்த தமிழக முதலமைச்சர், "பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் முதல்வரின் பேச்சு பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முதல்வரின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்," பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசி இருக்கக் கூடாது." என கூறியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐயா மருத்துவர் ராமதாசு அவர்கள் மீது வெறுப்பை உணர்ந்திருக்கிறார். ஐயா அவர்கள் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இம்மக்கள் இந்த மண் மொழி இனம் குறித்து மட்டுமே சிந்தித்து செயலாற்றி வருபவர்!
அவர் நாள்தோறும் வெளியிடும் அறிக்கைகள் அனைத்துமே உடனடி தீர்க்கப்பட வேண்டிய செயல்படுத்த வேண்டிய சமூகத்தின் தேவை என்பது அதனை படித்தவர்களுக்கு புரியும். மருத்துவர் ஐயா அவர்கள் வேலையில்லாமல் அறிக்கைகள் வெளியிடவில்லை. வேலை தெரியாதவர்கள் செயல்படுவதற்காக வெளியிடுகிறார்! இதுவரை எந்த ஒரு அரசியல் பதவியையும் அனுபவிக்காமல் தனி மனிதனாக இருந்து 6 இட ஒதுக்கீடுகளை இந்திய சமுதாயத்திற்கு பெற்றுத் தந்தவர்!
அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருபவர் அல்ல! அம்பேத்கரின் கொள்கைப்படி இட ஒதுக்கீடு கொள்கைகளை பின்பற்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்! முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு பேசி இருக்கக் கூடாது." என கூறியுள்ளார்.
இதற்கிடையே, மருத்துவர் ராமதாஸை மரியாதை குறைவாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஒரு முதலமைச்சர் இவ்வாறு பேசுவது அவர் வகுத்து வரும் பதவிக்கு அழகு அல்ல என பாமக தலைவரும், பாமக நிறுவனர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
‘அய்யா பாமக’.. ராமதாஸ் அணியின் புதிய கட்சி! தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்.. தலைவர் யாரு பாருங்க? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications