வாரிசு அரசியலின் உச்சம்.. மேடைய கொஞ்சம் பாருங்க.. திமுக மகளிர் உரிமை மாநாட்டை விளாசிய குஷ்பு!
சென்னை: நேற்று திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்ற நிலையில், வாரிசு ஆட்சியை மட்டுமே நம்புபவர்கள் என்று நாங்கள் சொல்லியதை சரியென திமுக நிரூபித்துள்ளது என குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 'மகளிர் உரிமை மாநாடு' நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி முன்னிலை வகிக்க, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, ஆனி ராஜா, டிம்பிள் யாதவ், சுஷ்மிதா தேவ், ராக்கி பிட்லன் உள்ளிட்ட முக்கியமான அகில இந்திய பெண் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, திமுக மகளிர் மாநாடு வாரிசு அரசியலின் உச்சம் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மாநாடா? அல்லது வாரிசு அரசியலின் காட்சியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் மகள், முகமது முப்தி சயீத் சாப்பின் மகள், சரத் பவாரின் மகள், அகிலேஷ் யாதவின் மனைவி, சந்தோஷ் மோகன் தேவின் மகள், கருணாநிதியின் மகள் உள்ளிட்டோர் கருணாநிதியின் மகன் தலைமையில் அரசியல் குடும்ப அடையாளங்களைக் கொண்டவர்கள் ஒன்று கூடி உள்ளனர்.
இந்தியா என்ற இந்தக் கூட்டணியில் தந்தையோ, கணவரோ, அரசியல் குடும்பப் பெயரோ இல்லாமல் தானே சாதித்து வெற்றி பெற்ற எந்தப் பெண்ணும் இல்லையா? வாரிசு அரசியலின் உச்சம் இது. வாரிசு ஆட்சியை மட்டுமே நம்புவது திமுக என நாங்கள் கூறுவதை சரி என நிரூபித்திருக்கிறார்கள்" என குஷ்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications