திமுகவில் மேலும் 2 அமைச்சர்களுக்கு சிக்கல்.. சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக விசாரிக்கிறது ஐகோர்ட்
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்.எஸ்.ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. நாளை புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசராணைக்கு எடுத்துள்ளது. 2 அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கன்வே சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ் ஆர் ராமச்சந்திரன் ஸ்ரீவல்லிப்புத்தூர் நிதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஏற்கனவே அண்மையில் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதிய நீதிமன்றம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் மேலும் இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications