தீபாவளி வந்துடுச்சு.. இனி கவலையே வேண்டாம்.. இபி துறை எடுத்த முக்கிய முடிவு.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படியே இந்த வருடம் கோடை காலத்தில் பெரிதாக மின் தடை ஏற்படவில்லை., அதேபோல் தீபாவளி சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக 'மின் தடை' இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
மின்சார துறை முக்கிய அறிவிப்பு: அதேபோல் இபி தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. TANGEDCO என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது.
TANGEDCO செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம். இதில் லாகின் செய்த பின் உங்கள் இபி நம்பர் மற்றும் போன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின் என்ன மாதிரியான புகார் என்பதை கொடுக்க வேண்டும்.
மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்ஃபோன் 2 செயலியில் புகாரளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது TANGEDCO. மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். அப்படி மீறி மின் தடை ஏற்பட்டால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம்.
வேகமான நடவடிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
புகார்கள்: அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் , டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.
புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
44 மின் பகிர்மான வட்டங்களாக தமிழ்நாடு மின் வாரியம் தற்போது செயல்படுகிறது. இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இந்த வாரியம்தான் மக்களின் குறைகளை போக்க உள்ளது.
மின்சார பயன்பாடு: முன்னதாக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம். தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் சமமானது.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. டெல்லியில் நடந்த மின் துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications