மார்கழியில் இறந்த புண்ணியவான் விஜயகாந்த்.. திருமுகத்தை காண தீவுத்திடலில் குவிந்த தொண்டர்கள்
சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் வைக்கப்படும் நிலையில் அங்கு தேமுதிக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நிமோனியாவால் இறந்த நிலையில் அவர் நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடலுக்கு கருப்பு கண்ணாடி, பட்டாடை, கழுத்தில் கட்சி துண்டு, கையில் கட்சி சின்னம் பதித்த மோதிரம் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்கு இடநெருக்கடி காரணமாக அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவரது உடலை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு பிற்பகலில் மீண்டும் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி இன்று காலை 5.00 மணிக்கு தீவுத்திடலை நோக்கி விஜயகாந்தின் உடல் பயணம் தொடங்கியது. வழிநெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் கூடி பீக் ஹவரில் இருப்பதை போன்று டிராபிக் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவுத்திடலில் விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்துள்ளார்கள்.
அங்கு இரவோடு இரவாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தப்படும் இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் காவல் துறை ஆணையர் சஞ்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நள்ளிரவில் ஆய்வு செய்தனர். அங்கு கேப்டன் முகத்தை காண வெளிமாவட்ட மக்கள் குவிந்துள்ளனர். மார்கழி மாதத்தில் இறந்தால் சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்பார்கள். அது விஜயகாந்துக்கு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications