கூட்டணியில் இழுபறி.. விஜயகாந்த்துக்கு வந்த கோபம்.. அதிரடி முடிவெடுத்த தேமுதிக.. அடுத்து என்ன?
சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆலோசனைக்கு பின்னர் அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இது தொடா்பாக தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிப்பிர்ல தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்டச் செயலாளா்கள் அனைவரும தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

எந்த முடிவும் இல்லை
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கூட்டணியை உறுதி செய்ய இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது. ஆனால் கூட்டணியை உறுதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் தேமுதிக எடுக்கவில்லை. தேமுதிக தரப்பில் 23 தொகுதிகள் வரையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் கேட்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள்
ஆனால் அதிமுக தரப்பில் 13 -இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனால், முன்னேற்றமே இல்லாமல் தொடா்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது.

அதிமுக திட்டவட்டம்
ஆனாலும் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. அதிமுகவை பொறுத்தவரை தேமுதிகவை தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்துவிட்டது. தேமுதிகவிற்கு தொகுதிகள் ஒதுக்கினால் தான் யாருக்கு எந்த தொகுதி என்று பிரிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க முதல்வர் திட்டவட்டமாக மறுத்தார்.

தொகுதி பங்கீடு பாதிப்பு
இதையடுத்து தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications