ஜன.24 ஆம் தேதி விஜயகாந்த் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்! தேமுதிக தொண்டர்களுக்கு அழைப்பு!
சென்னை: ஜன.24 ஆம் தேதி அன்று விஜயகாந்த் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைந்து 20 நாட்களை கடந்தும் அவரது நினைவிடத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. மறைந்தும் மிளிரும் சுடரைப் போல் மறைந்தும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் விஜயகாந்த். சுற்றுலா தலத்துக்கு செல்வதை போல், மக்கள் சாரை சாரையாக தினமும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைமை கழகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு;
''தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்படி பார்த்தால் இந்த அறிவிப்பை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட வைத்திருக்கிறார். விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவருக்காக நடத்தப்படும் முதல் நிகழ்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிரேமலதா புரிந்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது.
விஜயகாந்தை பொறுத்தவரை அவர் மறைந்துவிட்டாலும் தேமுதிகவுக்கு புத்துயிர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். மனச்சோர்வில் இருந்த தொண்டர்கள் எல்லாம் இப்போது பழைய படி ஆக்டிவாக கட்சிப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications