பாராட்டுகள்… நன்றி… வாழ்த்துகள்.. இந்திய விமானப்படைக்கு நம்ம கேப்டன் சொன்னது
Recommended Video

சென்னை:இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து அருகே இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாம்களை குண்டுவீசி தகர்த்தது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆயிரம் கிலோ அளவிலான வெடிகுண்டுகளை கொண்டு தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை அறிவித்தது.

அறிக்கை வெளியீடு
இந்திய விமானப்படையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எவ்வித பாகுபாடும் இன்றி வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தும் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
மோடியை வாழ்த்தும் கேப்டன்
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் நாட்டுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப் படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேமுதிக சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வீரர்கள் தியாகம்
முன்பு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தருணத்தில், நமது நாட்டைப் பாதுகாப்பதற்கு தன் உயிரைத் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இந்த பதிலடி தாக்குதல் மிகப்பெரிய ஒரு ஆறுதலாக இருக்கும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்
இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் இன்றைய பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக எனது வாழ்த்துகள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
சூரியனே மறையாத பேரரசு பிரிட்டன் கற்ற பாடம்.. டிரம்ப் மறந்த வரலாறு.. அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பமா? -
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா! -
இந்தியாவை விடுங்க.. டிரம்பிடம் வசமாக சிக்கிய அமீரகம் - சீனா - துருக்கி.. ஈரானால் வந்த பெரிய பிரச்சனை -
Vaa Vaathiyaar Review: வா வாத்தியார் எப்படியிருக்கு? மெய்யழகனுக்கு பிறகு கார்த்திக்கு கம்பேக் படமா? -
கோயம்பேட்டில் இருந்து மாறிய ஆதார் சேவை மையம்.. தமிழ்நாட்டில் 30 இடங்களில் புதிய மையங்கள் -
ஆட்டுக்கறி விலை மளமள உயர்வு.. ஆந்திராவை மலைக்க வைத்த மட்டன்! மதுரை, கோவையில் கோழிக்கறி ரேட் எகிறியது -
ஓபிஎஸ் கூட்டணியை அறிவிக்கிறார்.. கறாரான எடப்பாடி பழனிசாமி.. அந்த கட்சிக்கு போறாரா ஓ.பன்னீர்செல்வம்? -
பாஸ்மதி அரிசி - தேயிலை இனி கிடைக்காது.. ஈரான் மக்களை தண்டித்த டிரம்ப்.. நம் நாட்டுக்கு புது சிக்கல் -
Pongal OTT: ஜனநாயகன் இல்லை.. ஓடிடியில் பொங்கல் கொண்டாட்டம் முழு ஸ்விங்! லிஸ்டில் இந்த படமும் இருக்கு -
எங்களை எதிர்த்தா.. அவ்வளவுதான்.. சி.கா குடும்பத்தை கூட கண்டபடி தாக்கும் தவெக தலைகள்.. விஜய் மௌனம்? -
அரசு லேப்டாப்பில் முதல்வர் ஸ்டிக்கரை அகற்றி ரீல்ஸ்! எல்காட்டின் ஒரே வார்னிங்.. வாலை சுருட்டி அமைதி! -
மோடி பொங்கலில்.. பராசக்தி நாயகர்கள்.. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி.. எதிர்பார்க்காமல் தந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications