திடீர்னு "மிரட்டிய" விஜயகாந்த்.. அதிலும் அந்த "கருணாநிதியை".. அப்படியே அதிர்ந்த கூட்டம்.. என்னாச்சு?
விஜயகாந்த் நேற்று எழும்பூரில் பிரச்சாரம் செய்தார்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் 2வது நாளாக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. இதனால் அவரது தொண்டர்கள் படுகுஷியாகி உள்ளனர்.
விஜயகாந்த் இல்லாமல் எந்த தேர்தலையும் தேமுதிக சந்திக்கும் நிலையில் இல்லை.. அவரால் பேச முடியாவிட்டாலும், பிரச்சார வேனில் உட்கார வைத்தோ, நிற்க வைத்தோ வெளியே அழைத்துவர வேண்டி உள்ளது.
அவரால் சரளமாக பேசமுடியாத நிலை இருந்தாலும், முகத்தை பார்ப்பதற்காகவே பலரும் திரண்டு வருகின்றனர்.. உண்மையை சொல்ல போனால், விஜயகாந்த்துக்கு இந்த கூட்டணி சுத்தமாக பிடிக்கவில்லை என்று தகவல் கசிந்தது..

கூட்டணி
பாஜகவுடனேயே கூட்டணி தொடர வேண்டும், அவர்கள்தான் அப்போதிருந்து நமக்காக உதவியவர்கள், கூட்டணியை விட்டு போய்விடக்கூடாது என்று 6 மாசத்துக்கு முன்பே விஜயகாந்த் குடும்பத்தாரிடம் சொன்னாராம். அதனால்தான் பிரேமலதாவும் பலமுறை அதிமுக கூட்டணிக்காகவே காத்து கிடந்தார்.. வேறு வழியில்லாமல்தான் அமமுகவுடன் இணைந்துள்ளார் என்பது வேறு விஷயம்.

விஜயகாந்த்
இருந்தாலும், தன்னை நம்பி உள்ள தொண்டர்களுக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.. ஆனால், மவுன பிரச்சாரம்.. அவரால் பேச முடியவில்லை.. கைகளை மட்டும் அசைத்து கொண்டு போகிறார்.. அவரை பார்த்து மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.. முதல்நாள் கும்மிடிப்பூண்டி பஸ் ஸ்டாண்டில் பிரச்சாரத்துக்கு வந்தார்.. நேற்று எழும்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

உற்சாகம்
முதல்நாளில் தொண்டர்கள் கேப்டன், கேப்டன் என்று கோஷமிட்டும், அவர்களை நோக்கி கையை மட்டுமே அசைக்க முடிந்தது.. இதனால், தொண்டர்கள் கொஞ்சம் சோர்ந்து போய்விட்டனர்.. அதனால், நேற்றைய தினம் அவர்களை உற்சாகப்படுத்த, தேமுதிக தரப்பு வேறு ஒரு ஐடியா செய்தது.. ஏற்கனவே விஜயகாந்த் பிரச்சாரம் செய்த ஆடியோ பேச்சை ஒலிபரப்பியது..

ஆடியோ
கூட்டத்தில் திடீரென விஜயகாந்த்தின் முழக்கம் கேட்டதும் மக்கள் ஒரு கணம் ஷாக் ஆனார்கள்.. பிறகுதான் அது விஜயகாந்த்தின் பழைய ஆடியோ என்று தெரியவந்தது. இதை கேட்டதும் ஓரளவு அவர்கள் தெம்பானார்கள்.. விஜயகாந்த் மிரட்டலுடன் பேசும் பேச்சை கேட்டு கைகளையும் தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

கருணாநிதி
இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், "திமுக தலைவர் கருணாநிதியை தோற்கடியுங்கள்" என்ற சத்தமும் அதே ஆடியோவில் இருந்து கேட்டது.. இதை கேட்டதும் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது... ஆனால் விஜயகாந்த்தோ, கை அசைத்தும், கட்டை விரலை காட்டியும் அவர் பாட்டுக்கு மக்களை பார்த்து அதே வெகுளித்தனத்துடன் சிரித்து கொண்டே நகர்ந்தார்.












Click it and Unblock the Notifications