கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் விசிக தேமுதிக இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக திருமாவளவனிடம் மனம் விட்டு பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு விளக்கமளித்துள்ளார்.
கடலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டார். திருமாவளவன் மற்ற வேட்பாளர்கள் பெயரை சொன்னபோது எழுந்து நின்றனர். ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுந்து நிற்கவில்லை. திருமாவளவன் சொல்லும்போது நிற்காத பிரேமலதா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லும்போது எழுந்து நின்றார்.

மனம் விட்டு பேசினோம்
இது விசிகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரேமலதாவுக்கு எதிராக விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரேமலதா, "அது ஒரு பொதுக்கூட்டம். இந்த கூட்டணியின் தலைமை யார். ஸ்டாலின் தானே. ஸ்டாலின், திருமாவளவன் இருவரும் என் அருகில் தான் அமர்ந்திருந்தனர். கூட்டணியின் தலைமையில் இருப்போர் தான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார்கள்.
இது எல்லோருக்கும் தெரியும். திருமா அண்ணன் அவர்களின் வேட்பாளர்களை மட்டும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்காது என்பதால், என் பெயரையும் சொல்வதாக கூறினார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் எல்லாமே நெகடிவாக தெரியும். இதை தேவையில்லாமல் விமர்சனம் செய்கிறார்கள். நானும் திருமாவளவனும் நேற்று போனில் மனது விட்டு பேசினோம்.
வெளியில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும்
நான் தான் தவறு செய்துவிட்டேன். அண்ணன் ஸ்டாலின் தான் உங்களை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்று திருமாவே சொன்னார். இதை சிலர் திசை திருப்புகிறார்கள். அவருக்கும், கேப்டனுக்குமான நட்பு பற்றி எனக்கு தெரியும். வெளிச்சம் டிவி தொடங்கியபோது அதை ஆரம்பித்து வைத்தவர் கேப்டன்.
நாட்டில் நடக்கும் அவலங்களை நீங்க வெளிச்சம் போட்டு காட்டணும் திருமா என்று கேப்டன் அவரை ஆரத்தழுவி வாழ்த்தினார். மக்கள் நலக் கூட்டணியில் எங்களுடன் சகோதரராக பழகியுள்ளார். எங்கள் வீட்டிற்கு வந்தால் சாப்பிடாமல் செல்ல மாட்டார். இது எல்லாம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியுமா. எங்களுக்கு நல்ல நட்பு இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
நிறுத்திக்கோங்க
நான் சாதாரணமாக இருந்ததையும், சிரித்தால் தப்பு, கைவைத்தால் தப்பு என்கிறார்கள். எனக்கு புரியவில்லை. ஊழல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு, கஞ்சா வழக்கு போன்று தேமுதிக மீது எதையும் சொல்ல முடியாது. தேமுதிக நேர்மையான கட்சியாக இருப்பதால் சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறார்கள். திருமாவளவன் எனக்காக விருதாசலத்தில் பிரச்சாரம் செய்கிறார். விசிக வேட்பாளர்களுக்காக நான் பிரச்சாரம் செய்யவுள்ளேன். இதோடு தவறாக போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
-
தேமுதிக அதிர்ச்சி வைத்தியம்! பார்த்தசாரதிக்கு 'சீட்' மறுப்பு! கட்சி தாவுகிறாரா மாஜி எம்எல்ஏ? -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
என்னை அவர் அடித்ததில் மகிழ்ச்சி! திருமாவளவன் அறைந்தது குறித்து இளைஞர் விளக்கம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா!












Click it and Unblock the Notifications