தலைநகர் சென்னையை குறி வைக்கும் தேமுதிக.. 100 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அமமுக மற்றும் தேமுதிக இந்த முறை தனித்தனியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்தன.
திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தேமுதிக முதற்கட்டமாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications