அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும்.. துரைமுருகனுடன் பேசியது உண்மை.. சுதிஷ் பளிச்
சென்னை:அதிமுக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று சுதிஷ் கூறியிருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. திமுகவுடன் பேசியதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் மோடியுடன் பொதுக்கூட்டத்தில் இருந்து தேமுதிக கொடிகள், விஜயகாந்த் புகைப்படம் அகற்றப்பட்டது.
இந் நிலையில் சென்னையில் அமைச்சர் பியூஷ் கோயலை சுதிஷ் சந்தித்து பேசினார். அது குறித்து அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:
அமைச்சர் பியூஷ் கோயல் என்னுடன் தொலைபேசியில் பேசினார். சென்னை வந்து பார்க்க வேண்டும் என்றார். கட்சி அலுவலகத்தில் அமாவாசை பூஜை. அதை முடித்துக் கொண்ட பின்னர் அவருடன் சந்தித்தேன்.
மோடி மகிழ்ச்சியை சீர்குலைத்த தேமுதிக .. வந்த வேகத்திலேயே வெந்து போன கூட்டணி!
தேர்தல் கூட்டணி, எந்த தொகுதிகள் என்பது குறித்து பேசினேன். எந்த தொகுதியில் போட்டி என்று ஆலோசனை நடத்தினேன். நாங்க பாஜகவுடன் மட்டுமே தொடக்கம் முதலே பேசி வருகிறோம். நாளை அல்லது நாளை மறுநாள் இறுதி விவரம் தெரியும்.
அந்த தருணத்தில் திமுகவில் இருந்து துரைமுருகன் பேசினார். அவரிடம் நான் பேசியது உண்மைதான்.
பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து எங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டோம். எங்க பலம் எங்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் தொகுதி கேட்டுள்ளோம் என்று கூறினார்.