2 தொகுதிகள்... 2 நாட்கள்... பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
சென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 2 நாட்கள் மட்டும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் அந்த தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுகவும், அதிமுகவும் கடுமையாக களப்பணியாற்றி வருகின்றன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் இரண்டு தொகுதிகளிலும் தலா நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி திமுக தலைவர் நாங்குநேரியில் கடந்த 2 நாட்களாக முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டார். சீன அதிபரை நாளை வழியனுப்பி வைத்து விட்டு நாளை மறுதினம் முதல் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் 15, 16-ம் தேதிகளில் மட்டும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். தொகுதிக்கு ஒரு நாள் மட்டுமே செலவிடுகிறார் பிரேமலதா, இதனால் முழுமையாக மக்களை சந்திக்க முடியாது எனத் தெரிகிறது. இதனிடையே பிரச்சாரத்திற்கு வரும் எண்ணத்தில் இல்லாமல் இருந்த பிரேமலதாவை, அதிமுக தான் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்பின்னர் தான் பிரச்சாரத்திற்கு செல்வது என்ற முடிவை எடுத்துள்ளார் பிரேமலதா. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனக்கு உடல்நலமில்லாத இந்த தருணத்தில் கூட விக்ரவாண்டியில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாளை நாங்குநேரியிலும் பத்துக்கும் மேற்பட்ட பாயிண்ட்களில் வைகோ பேச இருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications