கடும் அதிர்ச்சியில் தேமுதிக.. கோபம் காட்டிய அதிமுக தலைகள்.. அட இதுதான் காரணமா!
தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்று மதியம் வெளியிட முடிவு செய்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்றும் வெளியிடவில்லை. தேமுதிக கேட்ட சில முக்கிய தொகுதிகள் அதிமுக கொடுக்காதது இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது.
தேமுதிக எந்த கூட்டணியில் இணைய போகிறது, லோக்சபா தேர்தலில் எப்படி போட்டியிட போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக இத்தனை நாட்கள் இருந்தது.
தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் லோக்சபா தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முதலில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது.
அதன்பின் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் மூன்றாம் அணி அமைக்கும் திட்டத்திலும் தேமுதிக இருந்தது.

ஏற்படவில்லை
ஆனால் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இதையடுத்து தேமுதிக மீண்டும் அதிமுக பக்கம் சென்றது. அதிமுக உடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

ஆலோசனை
அதிமுகவுடன் கடந்த 5 நாட்களில் மட்டும் 6 முறைக்கும் மேல் தேமுதிக தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதில் அப்போது எல்லாம் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதற்கு இடையில் தற்போது தேமுதிக அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

என்ன கேட்டனர்
கூட்டணி குறித்து இதில் இவர்கள் ஆலோசித்த பின் அதிமுக தலைகளிடம் பேசி இருக்கிறார்கள். அதிமுக தலைவர்களிடம் இவர் 7 தொகுதியில் இருந்து 5 தொகுதிக்கு குறைந்து வந்து இருக்கிறார்கள். அதன்பின் 4 தொகுதிகள் வரை கூட இவர்கள் குறைந்து வந்து இருக்கிறார்கள்.

ஆனாலும் நிறைவேறவில்லை
ஆனாலும் இந்த கூட்டணி ஒப்பந்தம் நிறைவேறவில்லை. இதற்கு பின் பல முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.
1. அதிமுக 4 தொகுதிகளில் 2 தலித் தொகுதிகளை தருவதாக கூறியுள்ளது.
2. தேமுதிக வட மாவட்டங்களை கேட்டு இருக்கிறது.
3. அதிமுக ஒரு வடமாவட்டம் கூட கொடுக்க முடியாது என்றுள்ளது.
4. தேமுதிக தேர்தல் செலவிற்கு பணம் கேட்டுள்ளது.
5. தேமுதிகவின் எந்த விதமான செலவையும் ஏற்க முடியாது என்று அதிமுக கூறியுள்ளது.
6. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க தேமுதிக மறுத்துவிட்டது, இந்த ஆறு காரணங்கள்தான் இந்த கூட்டணி உருவாகாமல் போக காரணம் என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications