உள்ளாட்சி தேர்தல்.. விசிக வைத்த பெரிய கோரிக்கை.. உடனே ஏற்றுக்கொண்ட திமுக.. திருமா ஹாப்பி!
உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.
உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளித்தது. ஆனால் திமுகவின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு இல்லை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிந்து தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளதால், திமுக தற்போது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கலாம் என்று திமுக ஆலோசித்து வருகிறது.
மேயர் பதவிகள்
மறைமுக தேர்தல் நடப்பதால் மேயர் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை நடந்து வருகிறது. அதேபோல் உள்ளாட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் தனியாக தேர்தல் நடக்கிறது. இதனால் மேயர் பதவிகள், கவுன்சிலர் பதவிகளை அளிப்பதில் பெரிய சிக்கல் நிலவி வருகிறது.
விசிக திமுக
இது தொடர்பாக தற்போது விசிக - திமுக ஆலோசனை நடத்தி வருகிறது,. இந்த ஆலோசனையில் மேயர் தேர்தல் நடந்தால் விசிக்காவிற்கு இரண்டு இடங்கள் அளிக்க வேண்டும் என்று திமுகவிடம் அதன் தலைவர் திருமாவளவன் கேட்டு இருக்கிறார். முக்கியமான இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கவுன்சிலர்
நகராட்சியில் முக்கியமான கவுன்சிலர் பதவிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். தனி தொகுதிகளில் அதிக அளவில் விசிகவை போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். விசிகவின் இந்த கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
திமுக எப்படி
இந்த சந்திப்பு தொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது. எங்களின் கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டுள்ளது, என்று குறிப்பிட்டார்.