திமுக கூட்டணி சீட் கணக்கு.. மதிமுகவுக்கு சிக்கல்? வைகோவுக்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் எடுத்த முடிவு!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மக்கள் நீதி மக்கள், கொமதேக, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்து வருகின்றன. இந்த தேர்தலில் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரும் இணைகின்றனர்.
அதேபோல் தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் பிரிவையும் இணைக்க திமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இத்தனை கட்சிகளுக்கும் திமுக தலைமை எப்படி தொகுதிகளை பங்கீடு செய்யும் என்ற கேள்வியே பலரின் மனதில் உள்ளது. ஏனென்றால் கடந்த ஓராண்டாகவே விசிக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேசி வந்தனர்.

பீகார் தேர்தல் முடிவுக்கு பின் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அந்த கோரிக்கையை கைவிட்டுள்ளன. ஆனால் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளையும் திமுக ஒதுக்கீடு செய்தது.
இம்முறை காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக விசிக இரட்டை இலக்க தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். தவெக அரசியல் களத்தில் களமிறங்கி இருப்பதால், பல்வேறு கட்சிகளுக்கும் விஜய்யும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக தலைமை முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இம்முறை 4 முனைப்போட்டி இருக்கும் என்பதால், எந்த சிறிய கட்சியையும் எளிதில் விட்டுவிடக் கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் குறியாக இருக்கிறார்.
பல தொகுதிகளிலும் சில வாக்குகளில் கூட வெற்றி, தோல்வி மாறக் கூடும். இதனால் 2016 சட்டசபைத் தேர்தல் போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று திமுக தலைமை ஒரு கணக்குக்கு வந்துள்ளது. அதாவது விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய 3 கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.
அதற்கு பதிலாக மதிமுகவுக்கு சில தொகுதிகளை குறைக்க முடிவு எடுத்திருக்கிறது. அதற்கு பதிலாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஆலோசித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மதிமுக பிடி கொடுக்கவில்லை என்றால், வாழ்த்தி வழியனுப்பும் யோசனையில் இருக்கிறார்கள்.
அதற்கேற்ப மதிமுகவில் இருந்த மல்லை சத்யா புதிதாக திராவிட வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். ஏனென்றால் இம்முறை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதேபோல் உதயசூரியன் சின்னம் மற்றும் சொந்த சின்னம் ஆகியவற்றில் நிற்பதை பொறுத்தும் சில தொகுதிகளை குறைக்க திமுக தலைமை ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
-
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
மதிமுக + கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.. 6 தொகுதிகளுக்கு வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு











Click it and Unblock the Notifications