Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

கோவை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையிலேயே, தமிழகத்தின் 'மேற்கு மண்டல தலைநகரான' கோவையில் தொகுதிப் பங்கீடு விவகாரம் திமுக கூட்டணியில் தற்போதே பெரும் புயலை கிளப்பியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக, திமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

DMK Alliance

இந்த நிலையில் கடந்த முறை கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்லவில்லை. இதனால் இந்த முறை எப்படியாவது மொத்தமாக அள்ளலாம் என யோசனையில் இருந்து வருகிறது.

ஆனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 சட்டசபைத் தொகுதிகளில், இந்த முறை கூட்டணிக் கட்சிகள் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது. அதாவது மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இந்த 10-ல் குறிப்பாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM), இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தங்களுக்குள் 6 தொகுதிகளை பங்கு போடத் திட்டமிட்டுள்ளன.

கடந்த காலங்களில் இத்தொகுதிகளில் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம், எனவே இந்த முறை எங்களுக்குப் பிரதிநிதித்துவம் அதிகம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

ஆனால், திமுக மாவட்ட நிர்வாகமோ இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கடந்த 2021 தேர்தலில் கோவையில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கறையைத் துடைக்க இந்த முறை கோவையை திமுக நேரடியாகத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புகிறது.

நிர்வாகிகளின் கருத்து: "கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால், அது எதிரணிக்குச் சாதகமாகிவிடும். கோவையின் வளர்ச்சிக்காக முதல்வர் செய்துள்ள மெகா திட்டங்களை முன்வைத்து திமுகவே களமிறங்க வேண்டும்" என்பதே இவர்களின் ஒற்றை நிலைப்பாடு.

இந்த இக்கட்டான சூழலில், தமிழக உளவுத்துறை (Intelligence Bureau) அளித்துள்ள ரகசிய அறிக்கை திமுக தலைமையைத் தற்காத்துக் கொள்ள உதவியுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

செல்வாக்கு உயர்வு: கடந்த 3 ஆண்டுகளில் கோவையில் மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் அறிவிப்புகள் மக்களிடையே திமுகவின் செல்வாக்கை 40% க்கும் மேல் உயர்த்தியுள்ளது.

மக்களின் மனநிலை: மக்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர். எனவே, 'உதயசூரியன்' சின்னம் நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அதிமுக - பாஜக மோதல்: எதிர்க்கட்சிகளுக்குள் நிலவும் பிளவு, திமுகவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

உளவுத்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து, கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. 6 இடங்களைக் கேட்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்களை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 7 முதல் 8 தொகுதிகளில் திமுகவே நேரடியாகப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

அதிமுகவும் அது போல் கோவை மாவட்டத்தில் 2 தொகுதிகளை பாஜகவுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள 8 தொகுதிகளில் அதிமுக போட்டியிடக் கூடும் என்பதால் திமுகவும் அது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளதாம். எல்லாவற்றையும் விட அதிமுகவுக்கு திமுக நேரடி போட்டியாக இருந்தால் மட்டுமே களம் சூடுபிடிக்கும் என்றும் கருதப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், "கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த முறை திமுக 'ரிஸ்க்' எடுக்கத் தயாராக இல்லை. கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்திவிட்டு, தனது பலத்தைக் காட்டவே முனைப்பு காட்டும்." என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+