ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டியின் ‘வார்டு செயலகம்’ ஸ்டைல்- அதிரும் முதல்வர் ஸ்டாலின் செம்ம வியூகம்!
சென்னை: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வார்டு செயலகம் ஸ்டைலில் திமுக வாக்கு சாவடி பொறுப்பாளர்களை களமிறக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக வார்டு செயலகம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வார்டு செயலகம்: ஆந்திராவில் வார்டு செயலகத்துடன் இணைந்த வார்டு செயலகப் பொறுப்பாளர்களுகு 10 வீடுகள், 50 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான அரசு சார் உதவிகள், சான்றிதழ்கள், திட்ட உதவிகள் அனைத்தையும் கவனித்து உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் வார்டு செயலகத்தின் நோக்கம்.
ஜெகனுக்கு ஆதாயம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனின் இந்த வார்டு செயலகம் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களுடன் இணைந்து மக்களின் தேவைகளை ஆளும் அர்சாங்கம் பூர்த்தி செய்வதால் தேர்தல் பிரசார பணி எளிதாகும் என்பது ஜெகன் மோகன் ரெட்டியின் வியூகம்.
வாக்கு சாவடி பொறுப்பாளர்கள்: இதே அஸ்திரத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். காங்கேயம் அருகே இன்று மேற்கு மண்டல திமுக வாக்கு சாவடி முகவர்கள்/ பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.

அண்ணா மீது சத்தியம்: இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு வாக்கு சாவடி பொறுப்பாளரும் தங்களது வாக்கு சாவடிக்குட்பட்ட வீடுகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும்; பொதுமக்களுக்கு தேவையான பட்டா மாறுதல், சான்றிதழ்கள் அனைத்தையும் உடனுக்குடன் பெற்றுத் தர வேண்டும். மக்களிடம் இருந்து இப்படி கோரிக்கைகளுடன் வரும் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மனுக்கள் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அப்படி செய்ய மறுக்கிற அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது என்னிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். வாக்கு சாவடி பொறுப்பாளர்களே! உங்களது கோரிக்கை சத்தியமாக நிறைவேறும்; அண்ணாவின் மீது சத்தியமாக நிறைவேறும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
தேர்தலில் தாக்கம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனின் வார்டு செயலகம் மாடலை தமிழ்நாட்டில் திமுகவின் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மூலம் செயல்படுத்துவது என்கிற முதல்வர் ஸ்டாலினின் வியூகம், தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா? -
159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்! -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ்












Click it and Unblock the Notifications