விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..!
தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டதைத் தொடர்ந்து, திமுக ஐடி விங் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தின் கடன்-ஜிடிபி விகிதம் 27.05% ஆக இருந்த நிலையில், தற்போது அதை 26.43% ஆக குறைத்துள்ளதாக திமுக ஐடி விங் தனது ட்வீட்டில் உரிமை கோரியுள்ளது. இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளையில், விஜய் தலைமையிலான அரசின் அமைச்சர்களை கிண்டல் செய்வது போல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், "ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் போட்டியே ஒன்னு, மேடைக்கு 'இட்டுனு வந்து இட்டுனு போறவருக்கு' இன்னொன்னு, பின்னால நின்னு 'உருட்டுக்கட்டைய எடுத்துட்டுப் போறவருக்கு".
ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் போட்டியே ஒன்னு, மேடைக்கு 'இட்டுனு வந்து இட்டுனு போறவருக்கு' இன்னொன்னு, பின்னால நின்னு 'உருட்டுக்கட்டைய எடுத்துட்டுப் போறவருக்கு pic.twitter.com/6kImcVIdpm
— DMK IT WING (@DMKITwing) June 17, 2026
திமுக ஆட்சியில் கடன்-ஜிடிபி விகிதம்
திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், திமுக ஆட்சிக்கு வந்த 2021ஆம் ஆண்டில் மாநிலத்தின் கடன்-ஜிடிபி விகிதம் 27.05% ஆக இருந்ததாகவும், தற்போது அதை 26.43% ஆக குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக அரசின் நிதி மேலாண்மை திறனை வெளிப்படுத்துவதாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த வெள்ளை அறிக்கையில் கடன்கள் எதற்காக வாங்கப்பட்டன, அவை மாநில வளர்ச்சிக்கு எப்படி உதவின என்பது குறித்து விரிவான விளக்கம் இல்லை என்றும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் ஏன் பேசவில்லை என்றும் திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
வெள்ளை அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் கடன்-ஜிடிபி விகிதம் 2025-26ஆம் நிதியாண்டில் 28.3% ஆக உள்ளது. தமிழ்நாடு நிதிப் பொறுப்புச் சட்டத்தின்படி, இந்த விகிதம் 25.2% ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது. ஆனால் தற்போது அது 28.3% ஆக உள்ளது. மேலும், என்.கே. சிங் குழு பரிந்துரைத்த 20% என்ற நிலையான அளவை விடவும் இது மிக அதிகமாக உள்ளது.
வெள்ளை அறிக்கையில் 28.3% என்பது முன்-தணிக்கை விபரம் என்பதையும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திமுக கூறும் 26.43% கடன்-ஜிடிபி விகிதம் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை. இந்த வித்தியாசத்திற்கான காரணம் முந்தையை ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதி விபரத்தை காட்டிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூடுதல் நிதி பொறுப்புகள் சேர்க்க உள்ளது மூலம் விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த கடன்-ஜிடிபி விகிதம் தொடர்ந்து 25.2% அளவை விட அதிகமாக இருப்பது, மாநிலத்தின் நிதி ஒழுக்கத்தில் கட்டமைப்பு ரீதியான பிரச்சினை இருப்பதை சுட்டிக்காட்டுவதாக வெள்ளை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடன்-ஜிடிபி விகிதம் எங்கே நிற்கிறது?
தமிழ்நாட்டின் கடன்-ஜிடிபி விகிதம் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 25.2% ஐ தாண்டியுள்ளது. இது 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்த 28.7% என்ற அளவை நெருங்கி வருவதாகவும் வெள்ளை அறிக்கை எச்சரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், மாநிலத்தின் நிதி நிலைத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு
2025-26ஆம் நிதியாண்டில், குஜராத் 1.9%, மகாராஷ்டிரா 3.0%, கர்நாடகா 2.8% என்ற அளவில் நிதிப் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.8% ஆக உள்ளது. கோவிட் காலத்திற்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் 3% என்ற அளவுக்குள் தங்கள் நிதிப் பற்றாக்குறையை கொண்டு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் இன்னும் அதை மீறிய நிலையில் உள்ளது.
இந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் நிதி நிலை பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற நிதி அழுத்தத்தில் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடப்படும் நிலை உருவாகியுள்ளது என்று வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
திமுக தங்கள் ஆட்சியில் கடன்-ஜிடிபி விகிதத்தை குறைத்ததாக உரிமை கோரும் அதே வேளையில், வெள்ளை அறிக்கை தரும் தரவுகள் மாநிலத்தின் நிதி நிலை இன்னும் சவாலானதாகவே இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இந்த விவாதம், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை மற்றும் எதிர்கால நிதிக் கொள்கை குறித்து மேலும் ஆழமான விவாதங்களைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வீடியோ
TVKFails என்ற ஹேஷ்டேக் உடன் மற்றொரு வீடியோவையும்.. உருட்டு கட்டையை வைத்து பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை Sofa model ஆட்சியில் நிதியமைச்சர் ஆக்கியதால் தமிழ்நாட்டில் "நீதி" பற்றாக்குறையாக உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.
உருட்டு கட்டையை வைத்து பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை Sofa model ஆட்சியில் நிதியமைச்சர் ஆக்கியதால் தமிழ்நாட்டில் "நீதி" பற்றாக்குறையாக உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.#TVKFails pic.twitter.com/9OkEtnVfWM
— DMK IT WING (@DMKITwing) June 17, 2026
-
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications