வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை! மசூதி வளாகத்தில் திமுக நிர்வாகி சுபேர் கான்! அடடே என்ன ஐடியா?
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் முயற்சியை திமுக முன்னெடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் சுபேர் கான், பள்ளிவாசலுக்கு வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகை நடத்த வந்த ஆயிரக்கணக்கானோரிடம் அரை மணி நேரத்தில் கையெழுத்துகள் பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.
நீட் விலக்கு நம் இலக்கு: நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார்.

திமுக சிறுபான்மையினர் அணி: திமுக தொடங்கியுள்ள இந்த கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார் அவர். அதன் அடிப்படையில் திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளும் நீட் தேர்வு விலக்கு கையெழுத்துக்களை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சென்னை வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் டேபிள், சேர் சகிதமாக நேற்று டேரா போட்ட திமுக சிறுபான்மையினர் அணி மாநிலச் செயலாளர் சுபேர் கான், ஜும் ஆ தொழுகை நடத்த வந்த இஸ்லாமியர்களிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்துக்கள் பெற்றார்.
வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல்: மூன்று நாட்கள் அலைந்து திரிந்து வாங்க வேண்டிய ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை மூன்று மணி நேரத்தில் ஸ்மார்ட் ஒர்க் செய்து வாங்கிவிட்டார் சுபேர் கான். இந்த வாரம் சென்னை வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் முகாமிட்டதை போல் வரும் வாரங்களில் அடையாறு பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய மசூதிகளில் நீர் தேர்வு விலக்கு கோரி இஸ்லமியர்களிடம் கையெழுத்து பெறும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயங்கள்: மசூதிகளில் கையெழுத்து வாங்கப்படுவதை போலவே தேவாலயங்களிலும் நீட் தேர்வு விலக்கு கோரி திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் கையெழுத்துக்கள் பெறப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications