ஆட்சி மாற்றம் வரப்போவது தெரிந்து அவசர அவசரமாக நேர்காணல்.. மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம்!
சென்னை: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதாக மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கு அவசர அவசரமாக நேர்காணல் நடத்தப்பட்டு வருவதாக திமுக மாணவர் அணி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரை நியமிக்க பாஜக அரசு துடிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது எனத் தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதாக மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, அரசின் பரிந்துரைகளை மீறி நடத்தும் நேர்காணலை உடனே நிறுத்த வேண்டும் என திமுக மாணவரணி வலியுறுத்தி உள்ளது.
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கான நேர்காணல் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்திற்குள் நடத்த வேண்டிய நேர்காணலை தற்போது நடத்துவதன் மூலம் தகுதி உடைய புதிய போட்டியாளர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மறைமுகமாக இந்த நிறுபனத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் இறங்கி இருக்கிறது. அதற்காகவே தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் திடீரென நேர்காணலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என சி.வி.எம்.பி எழிலரசன் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications