இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்.. காங்கிரஸ் நிலைப்பாட்டில் நல்ல மாற்றம்.. டிகேஎஸ் இளங்கோவன்!
வேலூர்: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடர்பாக மாலைக்குள் நல்ல செய்தி வரும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணியை சுமூகமாக முடிக்கதான் ஸ்டாலின் விரும்புவார் என்று கூறிய டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலில் ஆட்சியில் பங்கு என்று பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தற்போது, கூடுதல் தொகுதிகள் என்று பேச தொடங்கியுள்ளனர். திமுக - காங்கிரஸ் இடையில் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது திமுக 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்று கூறி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 41 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இதுதான் எங்களால் முடியும்.. இல்லையென்றால் உங்கள் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமுக தெளிவாக கூறிவிட்டது. இன்னொரு பக்கம் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேசி வந்தது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோ சந்தித்துள்ளனர். அப்போது திமுக எம்பிக்களான கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து வேலூரில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், காங்கிரஸ் உடனான கூட்டணியை சுமூகமாக முடிக்கதான் ஸ்டாலின் விரும்புவார்.
காங்கிரஸ் ஒன்று கேட்கிறது.. திமுக ஒன்று சொல்கிறது.. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார்கள் என்றால், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழா நடக்கவுள்ளது.
அந்த விழாவில் பங்கேற்க கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட டெல்லி காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதேபோல் திமுக நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதனால் இரவில் சந்திப்பு நடத்த திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது?












Click it and Unblock the Notifications