29 + 2 ராஜ்யசபா சீட் கேட்கும் காங்கிரஸ்.. இழுத்துப் பிடிக்கும் திமுக! தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?
சென்னை: திமுக குழுவினர் உடனான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 29 சட்டசபை தொகுதிகள் + ராஜ்யசபா சீட் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீட் எண்ணிக்கையை உறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நேற்று ஒரே நாளில்
நேற்று ஒரே நாளில் காங்கிரஸ் உட்பட 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (ஐயூஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை
மேலும், காங்கிரஸ் கட்சி குழுவினரும் நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்து திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் குழு கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியது. அப்போது, ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்கவில்லை. இதற்கிடையே மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவை சீண்டி வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கக் கூடுமோ? என்ற சந்தேகங்களும் எழுந்தன.
திமுக தொகுதி பங்கீடு
எனினும், காங்கிரஸ் தலைமை, திமுக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. திமுக எம்.பி கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்தும் பேசி இருந்தார். திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கை
காங்கிரஸ் கட்சி, முன்பு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது 40+ தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. எனினினும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வருகை காரணமாக தற்போது சீட் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையின்போது, கூட்டணி தர்மப்படி, நாங்களும் தொகுதி எண்ணிக்கையை எங்கள் எதிர்பார்ப்பில் இருந்து குறைத்துக்கொள்கிறோம் என்றுதான் காங்கிரஸ் குழுவினர் பேச்சை ஆரம்பித்துள்ளனர்.
29 சட்டசபை தொகுதிகள் வேண்டும் + 2 ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால், திமுக தரப்பிலோ, கூட்டணி விரிவடைந்துள்ளதால் எல்லா கட்சியுமே கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் தான் போட்டியிடுகிறோம், கூட்டணி பெரிதாகி உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, அதனை கருத்தில் கொண்டு சீட்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என திமுக தரப்பில் கூறியுள்ளனர்.
திமுக சொல்லும் எண்ணிக்கை
காங்கிரஸ் கட்சிக்கு 23 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் தரலாம் என முடிவு செய்துள்ளதாக டிஆர் பாலு கூறியுள்ளார். காங்கிரஸ் குழுவினரோ, கடந்த முறையே, கூட்டணியின் நலன் கருதித்தான் 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம், அதைவிட குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் இங்கு கட்சியை வளர்க்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக திமுக குழு கூறியுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் செல்கிறது. எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகை
எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான, இயற்கையான, உறுதியான, மதவாதத்துக்கு எதிரான கூட்டணி. இதனை சிதைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். எங்கள் கூட்டணி தமிழ் மண்ணை காக்கும் கூட்டணி. ஒருபோதும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை.
ராகுல் காந்தி தமிழகத்தின் மீது பற்று வைத்துள்ளார். மதவாத சக்திகள் தமிழகத்தில் நுழைய நாங்கள் விடமாட்டோம். தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவில்லை. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வதந்தி. கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தை, அவர் சொன்னதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் உயர் தலைமை திமுகவுடன் கூட்டணி நடத்தவே கூறியுள்ளது" என்று கூறினார்.
கிரிஷ் சோடங்கர்
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாகவும், நம்பிக்கையுடனும் நடக்கிறது. எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து கேட்டுள்ளோம். எங்களின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். கடந்த முறையை விட அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் திமுக குழுவிடம் பேசியுள்ளோம். இதுகுறித்து இரு நாட்களில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
-
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே












Click it and Unblock the Notifications