எங்களுக்கு கெடு விதிக்கப்பட்டதா.. காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியாக உள்ளது! செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு திமுக எந்த கெடுவும் விதிக்கவில்லை என்றும், கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறிய செல்வப்பெருந்தகை, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், திடீரென முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுகவிடம் கேட்டு வந்தது. ஆனால் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இணைந்திருப்பதால், 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக கூறியது.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நடத்தும் பேச்சுவார்த்தையில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை. இதனால் நேரடியாக டெல்லி மேலிடத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதன் காரணமாக சோனியா காந்தி தலையிட்டு மல்லிகார்ஜுன கார்மே மூலமாக ப.சிதம்பரம் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அரங்கேறிய சம்பவங்களை செல்வப்பெருந்தகையிடம் கேட்டுக் கொண்ட ப.சிதம்பரம், டெல்லியின் ரகசிய தகவல் மற்றும் எண்ணத்தையும் கூற ஸ்டாலினின் வீட்டிற்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பின் திமுக 29 தொகுதிகள் வரை கொடுக்க இறங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எண்ணமோ 36 தொகுதிகளாக இருப்பதாக தெரிகிறது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.
திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் எந்த இழுபறியும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக எந்த கெடுவும் விதிக்கவில்லை. அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம்.. பேசி முடித்த பின் அத்தனை தகவலையும் செய்தியாளர்களுக்கு செல்வோம் என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications