“வரலாற்றின் குப்பை தொட்டியில் இப்படி எத்தனையோ பேர்..” ஆளுநர் மீது முரசொலி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான உரசல் போக்கு தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், 'ஆளுநர் மாளிகையே அடங்கு' என்கிற தலைப்பில், திமுக நாளேடான முரசொலி கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் முதல் உரையை ஆளுநர்தான் நிகழ்த்துவார். ஆனால், அவர் என்ன பேச வேண்டும் என்பதை தமிழக அரசுதான் சொல்லும். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரை, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் மாற்றுக்கருத்து இருப்பின் ஆளுநர் கூறலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். அல்லது, தமிழக அரசின் உரையை மாற்றி வாசித்து வருகிறார்.

governor rn ravi tamil nadu

இந்த ஆண்டின் முதல் உரையை ஆளுநர் புறக்கணித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் குறித்து முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில்,

"சட்­டசபைக் கூட்­டத்­தில் ஆண்­டின் தொடக்­கத்­தில் ஆளு­நர் உரை­யாற்ற வேண்­டும் என்­பது மரபு. ஆளும் கட்சி, எழு­தித்தரும் உரையை வாசிக்க வேண்­டும் என்­பதே நெறி­முறை. இந்­தி­யா­வின் பெரும்­பா­லான மாநி­லங்­க­ளில் அனைத்து ஆளு­நர்­களும் இத­னையே முறை­யா­கக் கடைப்­பி­டித்து அர­சி­ய­ல­மைப்­புச் சட்டப்­படி நடந்து கொள்­கி­றார்­கள். ஆர்.என்.ரவி­யைப் போல் அழிச்­சாட்டி­யம் செய்­ப­வர்­கள் ஒரு சிலரே!

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப்­படி நடந்து கொள்­ளா­த­வர் மட்­டு­மல்ல; சட்­டத்தை மீறியே செயல்­ப­டு­ப­வர் தமிழ்­நாட்­டுக்கு ஆளு­ந­ராக வந்­துள்­ளார். நாக­லாந்­தில் இருந்து விரட்டி விடப்­பட்ட அல்­லது பயந்து போய் ஓடி­வந்து கிண்­டி­யில் ஒளிந்து கொண்­டுள்­ள­வர் இவர்.

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்கு விரோ­த­மாக பேசு­வது, செயல்­ப­டு­வ­து­தான் இவ­ரது வழக்­கம். ஆனால், ஆளு­நர் மாளிகை வெளி­யிட்­டுள்ள ஒரு அறிக்கை, தி.மு.க. அரசை 'அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­ன­ தை'ப் போல திசை திருப்­பும் வகை­யில் அமைந்­துள்­ளது.

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை சிதைப்­பதையே தொழி­லா­கக் கொண்ட பா.ஜ.க.வின் கூஜா­ தூக்கி ஒரு­வர், அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­துக்­காக கண்­ணீர் விடும் காட்சி போலித்­த­ன­மா­னது.

அவை நட­வ­டிக்கை தொடங்­கும் போது தமிழ்த்­தாய் வாழ்த்து பாடு­வதும், முடிந்­த­தும் தேசிய கீதம் பாடு­வ­தும் 35 ஆண்­டு­க­ளாக தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் மர­பாக இருக்­கி­றது. இதில் என்ன குறை கண்­டார் ஆர்.என்.ரவி!

தேசி­ய­ கீ­தம் பாடக்­கூ­டாது என்று சொன்­னோமா? இல்லை. தேசி­ய­ கீதம் பாடப்­ப­டு­கி­றது. சட்­டப்­பே­ர­வை­யில் மட்­டுமா பாடப்­ப­டு­கி­றது? அனைத்து அரசு நிகழ்ச்­சி­க­ளி­லும் பாடப்­ப­டு­கி­றது. முத­ல­மைச்­சர் உள்­பட அனை­வ­ரும் தேசி­ய­ கீ­தத்­துக்கு உரிய மரி­யாதை வழங்­கித்­தான் வரு­கி­றார்­கள். ரவிக்கு முன்­னா­லும் இது­தான் நடை­முறை. ரவி போனா­லும் இது­தான் நடை­முறை. ஆனால் இவர் ஏதோ 'தேசி­யத்­தின் பிள்­ளை­யாக' நடிக்­கி­றார்! 'மன்­னிப்­புக் கடி­தம்' கொடுத்து பிரிட்­டிஷ் ஆட்­சி­யிடம் கருணை காட்ட வேண்டி நின்ற கூட்­டத்­தின் சந்­த­தி­யான ரவி, தேசி­ய­ கீதத்­துக்­காக உரு­கு­வதை யார் நம்­பு­வார்?

தேசிய கீதம் பாடச் சொன்­னா­ராம், அர­சி­ய­ல­மைப்பு சட்ட கட­மையை இவர் செய்­யச் சொன்­னா­ராம், இதை 'சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னது' என்று முத­ல­மைச்­சர் சொன்­னது குற்­ற­மாம். பேச வந்து, பேசா­மல் போன­தைத்­தான் 'சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னது' என்­றார் முத­ல­மைச்­சர்.

உரையை வாசிக்க நாள் குறித்து, கிண்­டி­யில் இருந்து புறப்­பட்டு வந்து, அணி­வ­குப்பு மரி­யா­தையை ஏற்­றுக்­கொண்டு, அவைக்­குள் வந்து, வாசிக்­கப்­போ­கும் நேரத்­தில் வாசிக்­கா­மல் திரும்பி ஓடு­வது 'சிறு­பிள்­ளைத்­த­னம்' அல்­லா­மல் வேறு என்ன? தேசி­ய­கீ­தம் பாடச் சொல்­வதை சிறு­பிள்­ளைத்­த­னம் என்று சொல்­ல­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பு சட்ட அறி­ஞர்­கள், மேதை­கள், நீதி­ய­ர­சர்­கள் நிறைந்த அவை­யில் போய்நின்று ரவி, தனது நடத்­தையை விவ­ரிக்­கட்­டும். அவர்­கள் என்ன சொல்­வார்­கள்? இதையே ஆங்­கி­லத்­தில் சொல்­வார்­கள்! 'THE HINDU' நாளி­தழ் ( 7.1.2025 ) எழு­திய தலை­யங்­கத்தை எடுத்து ஆர்.என்.ரவி வாசிக்­கட்­டும். சிறு­பிள்­ளைத்­த­ன­மான சேஷ்­டையை நூற்­றைம்­பது ஆண்டு பாரம்­ப­ரி­யம் கொண்ட ஆங்­கில நாளி­தழ் கண்­டித்­துள்­ளதே. இந்­தத் தலை­யங்­கம் படித்­த­வர்­கள் அனை­வ­ரும் ரவியை எந்த லிஸ்­டில் சேர்ப்­பார்­கள்?

உடனே, முத­ல­மைச்­சர் மீது களங்­கம் கற்­பிக்­கி­றது ஆளு­நர் மாளிகை. பார­தத்தை ஒரு தேச­மா­க­வும், அதன் அர­சி­ய­ல­மைப்­பா­க­வும் ஏற்­றுக் கொள்­ளா­த­வர். முத­ல­மைச்­சர் என்­கி­றது அந்த அறிக்கை. அப்­படி யாரா­வது சொன்­னோமா? யார் தேசத் துரோகி என்­ப­தும், தேசத்­து­ரோக வர­லாறு யாருக்­குச் சொந்­தம் என்­ப­தும் நாட்டு மக்­கள் அறி­வார்­கள். எங்­க­ளுக்கு தேச­பக்­தியை, ஆர்.என்.ரவி­யி­டம் நாங்­கள்கற்க வேண்­டிய நிலை­மை­யில் இல்லை.

'ஆண­வம்' என்­கி­றது ஆளு­நர்மாளிகை. எது ஆண­வம்? ஒரு ரிடை­யர்டுபோலீஸ் ஆபீ­ஸர், பா.ஜ.க.வின் கூஜா தூக்­கி­யாக இருப்­ப­தால், யாரோ ஒரு­வ­ரின் தய­வால் ஆளு­ந­ராகி வந்து தமிழ்­நாட்­டை­யும், தமி­ழை­யும், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தை­யும், கோடிக்­க­ணக்­கான மக்­க­ளை­யும் கொச்­சைப்­ப­டுத்­தும் வகை­யில் தினந்­தோ­றும் செயல்­ப­டு­வ­து­தான் ஆண­வம் ஆகும். இங்­கி­ருந்து துரத்­தப்­பட்­டால் சீந்­து­வா­ரற்று ஏதோ ஒரு பங்­க­ளா­வில் பதுங்கி வாழக் கூடிய மாஜி அதி­காரி, மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முத­ல­மைச்­ச­ருக்கு இணை­யாகஅல்­லது அவரை விட மேலாக நினைத்­துக் கொள்­வது ஆணவத்தை விட தான்­தோன்­றித்­த­னம்.

யார் கொடுத்த தைரி­யத்­தில் இந்த ஆணவ ஆட்­டத்தை ஆளு­நர் மாளி­கையில் உட்­கார்ந்து போடு­கி­றீர்?

வர­லாற்­றின் குப்­பைத் தொட்­டி­யில் இப்­படி எத்­த­னையோபேர் போய் விழுந்து கிடக்­கி­றார்­கள்.

தாய்த் தமிழ்­நாட்­டை­யும், இந்­திய நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­பை­யும் காக்க எங்­க­ளுக்­குத் தெரி­யும்.ஆளு­நர் மாளி­கையே அடங்கு! பிடிக்­கா­விட்­டால் ஓடு" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+