அப்படிப்போடு.. ஆரத்தி எடுத்தவர்களுக்கு 'ஆறுதல்' தொகையா? நத்தம் விஸ்வநாதன் மீது திமுக புகார்
சென்னை: நத்தம் சட்டமன்ற வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
Recommended Video
முன்னாள் தமிழக அமைச்சரும், நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது, நத்தம் பகுதியில் அவருக்கு பொதுமக்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர்.

அப்போது அமைச்சருக்கு முன்பாக வந்த அதிமுக ஆதரவாளர் ஒருவர், வரிசையாக தரையில் வைக்கப்பட்டிருந்த ஆரத்தி எடுத்த தட்டுகளுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி பணத்தை விநியோகம் செய்து வந்தார். அங்கு களத்தில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் தனது பாக்கெட்டில் இருந்து பணம் பட்டுவாடா செய்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியருமான எம் விஜயலட்சுமி இது தொடர்பான தகவல்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நத்தம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதி துணை காவல் ஆய்வாளர் எம்எஸ் முத்துசாமி இந்த வழக்கு தொடர்பான சிஎஸ்ஆர் நகலை வெளியிட்டார்.
இந்நிலையில், ஆரத்தி எடுப்பதற்கு பணம் வழங்கியதாக நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications