கொரோனா தடுப்பு, நிவாரண பணிகள்... முதல்வர் நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ1 கோடி
சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ1 கோடி வழங்கப்படும் என அறக்கட்டளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
அதேபோல் தொழில் நிறுவனங்களும் இந்த நிதி உதவி வழங்கி வருகின்றன. இதேபோல் தி.மு.க. அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என இதன் தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் ரூ10 லட்சம் நிதி உதவி
மேலும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான வழங்கினர்.