யாரை பார்த்து திருடன்னு சொல்றீங்க.. அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக பதிலடி
மின்திருட்டு குற்றச்சாட்டுக்கு ஜெ.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு, திருட்டுதனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக காரசாரமாக பதில் அளித்துள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த விழாவின்போது, அங்கிருந்த கட்- அவுட்டுகளுக்கு மின்சாரம் திருட்டுதனமாக எடுக்கப்பட்டதாகவும், கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டை ஒன்றை சொல்லி இருந்தார்.
அதோடு, ஒரு வீடியோ ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டு அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஜெனரேட்டர்
அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு திமுக சார்பில் தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் இது சம்பந்தமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அவர் சொல்லி இருப்பதாவது: "பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும்.

பொறுக்க முடியவில்லை
சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த தகவலை செய்தியாக காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.
|
தரம் தாழ்ந்தவர்களா?
வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் தி.மு.க.வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

நடுங்கி போய் உள்ளது
அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது" என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications