"எதுவுமே சரியில்லை".. ஸ்டாலினுக்கு சென்ற போன் கால்.. பதறியடித்த திமுக.. அடுத்தடுத்து பறந்த வார்னிங்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் திமுக தரப்பு இன்று அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. திமுக நிர்வாகிகள் பலருக்கு இதனால் முக்கியமான வார்னிங் ஒன்று சென்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. மொத்தம் 173 தொகுதிகளில் திமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.187 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னம் போட்டியிடுகிறது.
திமுகவிற்காக அதன் நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்னொரு பக்கம் சில நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை கவனிக்கவில்லை என்றும் புகார் சென்றுள்ளது.

தென்காசி
திமுகவில் தென்காசி தற்போது இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆலங்குளம் சங்கரன்கோவில் தென்காசி தெற்கு மாவட்டம் ஆகும். இதன் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன். கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் உள்ளடக்கிய வடக்கு தென்காசியின் மாவட்ட பொறுப்பாளர் துரை. இவர்தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஆர்வம்
வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட துரை விருப்ப மனு அளித்து இருந்தார். ஆனால் இவருக்கு பதிலாக இங்கு மதிமுக களமிறங்கி உள்ளது. மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் இங்கு திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட முடியாத விரக்தியில் துரை கடந்த சில தினங்களாக இருந்தார்.

விரக்தி
இதனால் கடந்த சில தினங்களாக இவர் தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சரி திமுக வேட்பாளர்களுக்கும் சரி..இவர் தேர்தல் ரீதியாக பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் தென்காசியில் இருக்கும் சில திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் துறை குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகார்
இங்கே எதுவும் சரியில்லை. தேர்தல் பணிகளே நடக்கவில்லை. நீங்கதான் நடவடிக்கை எடுக்கணும் என்று போனில் புகார் சென்றுள்ளது. இதை கேட்டு திமுக பதறியடித்துள்ளது. தொடர்ச்சியாக நிறைய புகார் வந்த நிலையில் துரை மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . இவருக்கு பதிலாக செல்லத்துரை தற்போது வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வார்னிங்
இதையடுத்து திமுக நிர்வாகிகள் எல்லோரும் நன்றாக வேலை பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் கண்டிப்பாக என்று திமுக தலைமை தங்கள் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications