நவ.23-ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்... எதை பற்றி விவாதிக்க கூடுகிறது..?
சென்னை: நவம்பர் 23-ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Recommended Video
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.
நவம்பர் 20-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தி அதில் ஏதேனும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் அது தொடர்பாகவும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணியை இறுதி செய்வது பற்றியும் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களுடன் ஸ்டாலின் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் நிதி, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இந்தக் கூட்டத்தை திமுக நடத்தவிருப்பதால் அதில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பீகார் தேர்தல் முடிவுகள் குறித்தும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்தும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் ஸ்டாலின் விரிவாகவே ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.