Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திமுக.. இப்போ இந்தியாவிலேயே நம்பர் 1.. புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ் மகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திமுக, தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகி கொண்டிருப்பதாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வீடியோ வெளியிட்டுள்ளார். அதிமுக அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய ஜெயபிரதீப், அதிமுகவில் செல்வாக்கு உள்ள யாரும் இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு செயல்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணையத் தயார் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

OPS Jayapradeep DMK

தற்போது ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்ற குறுகிய நோக்குடன் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்.

இதனால் அதிமுகவில் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்டனர். ஒரு சிலர் மாற்று கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். ஆனால் சிலர் மாற்று கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல், எந்த பணியையும் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் இதுபோன்ற செயல்களால் அதிமுக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

1998ல் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார் ஓபிஎஸ். 18 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு முறை கூட ஜெயலலிதா ஓபிஎஸ்-ஐ பார்த்து கடுஞ்சொல் சொல்லியதில்லை. எந்த முடிவாக இருந்தாலும், தந்தை ஓபிஎஸ் உடன் கலந்தாலோசித்து முடிவினை எடுப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.

சொந்த கட்சியினரை காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பணியாற்றி கொண்டிருக்கிறார். இதனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் 10 ஆண்டுகள் முடங்கி இருந்த திமுக, தற்போது இந்தியாவிலேயே முதன்மை கட்சியாக உருவாகி கொண்டிருக்கிறது. ஆனால் நாம் சகோதரர்களுக்குள் பிரிவினையை கொண்டு வந்து தற்போது வரை செயல்படாமல் உள்ளோம்.

அதிமுக அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தாயை இழந்த ஓபிஎஸ், தற்போது கட்சியை இழந்து தவிக்கும் நிலையில் இருக்கிறார். அவர்தான் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் போராடி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். திடீரென ஜெயபிரதீப் வீடியோ வெளியிட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+