முப்பெரும் விழா...தயாராகிறது திமுக...சாதனைகளுடன் கனிமொழி பதிவு!!
சென்னை: திமுக முப்பெரும் விழாவுக்கு தயாராகி வருவதாகவும் அதற்கு முன்பாக திமுகவின் ஆரம்ப காலம் முதல் அதன் பயணத்தையும், சாதனையையும் தொகுத்து திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த தொகுப்பில் ஆரம்பத்தில் இருந்து திமுகவின் சாதனைகளை வெளியிட்டுள்ளார். 1949ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். திமுக 1957 தேர்தலில் போட்டியிட்டு 15 சட்டசபை இடங்களை கைப்பற்றியது. 1967ல் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது என்று ஒவ்வொரு நிகழ்வாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 1968ல் இருமொழிக் கொள்கையின் கீழ் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என சட்டம் இயற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. 1967ல் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது என்று நீள்கிறது.


1989ஆம் ஆண்டில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கியது. தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் துவங்கியது என்று திமுகவின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications