ரஜினிகாந்த் வாழ்த்தால்...திமுகவுக்கு எந்த வரவும் இல்லை...ஆர்எஸ் பாரதி!!
சென்னை: துரைமுருகன், டிஆர் பாலுவை ரஜினிகாந்த் வாழ்த்தி இருப்பதால் எந்த வரவும் திமுகவுக்கு இருக்கப் போவதில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு புதிய பொருளாளர், பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என்றும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

இவர்கள் இருவர் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், இவர்கள் இருவரும் இந்தப் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது. பொதுவாக திமுகவில் இந்த இரண்டு பதவிகளுக்கு எந்தவித போட்டிகளும் இன்றி தேர்வு செய்யப்படுவது வழக்கம். வரும் செப்டம்பர் 9ஆம் தேதி பொருளாளர், பொதுச்செயலாளர் தேர்வு செய்வதற்கு பொதுக்குழு கூட இருக்கிறது. அப்போது இவர்கள் இருவரும் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இவர்கள் இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்து இருக்கும் ஆர்எஸ் பாரதி, ''துரைமுருகன், டிஆர் பாலுவை ரஜினிகாந்த் வாழ்த்தியதால், எந்த வரவும் திமுகவுக்கு இருக்கப் போவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications