சென்னை மண்ணடியில் சிஏஏ எதிர்ப்பு போராட்ட களத்திற்கு வந்த முக ஸ்டாலின்.. ஆதரவாக பரபரப்பு பேச்சு
சென்னை; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மண்ணடியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் முஸ்லிம் அமைப்புகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து 27 நாட்களாக மண்ணடியில் போராடி வரும் முஸ்லிம் அமைப்பினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதற்காகவும். சட்டமன்றத்தில் பேசுவதற்காகவும் நன்றி தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் சென்னை மண்ணடியில் 27வது நாளாக நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், லோக்சபாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தது. ஆனால் மாநிலங்களவையில் அதிமுக ஆதரவுடன் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேறியது. அதிமுக சிஏஏவை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறி இருக்காது என்றார்.

முன்னதாக இன்று காலை என்ஆர்சி தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயகுமாருக்கும் சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்தது .
அப்போது பேசிய ஸ்டாலின்,ஸ்டாலின் என்.பி.ஆர்.அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன பிரச்சனை என கேள்வி கேட்டார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி கட்டுப்படுத்தும்? நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு மாநில சட்டமன்றம் கட்டுப்பட்டது என்று பதில் அளித்தார்

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பிறகு கடிதம் எழுதியுள்ளீர்கள், நீங்கள் கூறும் விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயக்குமார், விளக்கம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. என்.பி.ஆர் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என சுட்டிக்காட்டினார் இப்படி வாதம் நீண்டது.
இதையடுத்து என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications