தபால் வாக்குகளில் திமுகவே வெற்றி.. நம்பிக்கை வைத்து வாக்களித்த அரசு ஊழியர்கள்!
தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெற்றுள்ளது
Recommended Video
சென்னை: வழக்கம்போலவே இந்த முறையும் தபால் ஓட்டு முடிவில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்கள் விசுவாசத்தையும், எதிர்பார்ப்பையும் திமுக மேல் செலுத்தி உள்ளது தெரியவந்துள்ளது!
தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து போலீசாருக்கான ஓட்டுப்பதிவும் நடந்தது.

கடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டுகளில் சிறிய தவறுகளால், முடிவுகளே மாறின. தபால் ஓட்டுகளில், சிறிய தவறு நேர்ந்தாலும், அவை செல்லாததாக மாறும் என்பதால், இந்த முறை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உஷாராக உள்ளனர்.
தபால் ஓட்டுகள் என்பது ஒரு வேட்பாளரின் தலைவிதியையே நிர்ணயிக்கும் சக்தியாக மாறக்கூடியது. சென்ற முறை சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டுகளில் உள்ள சிறிய தவறுகளால்தான் முடிவுகளே மாறிவிட்டது.
இதற்கு காரணம், தபால் ஓட்டுகளில் ஒரு சிறிய தவறு நடந்தாலும், அவை செல்லாதவையாகிவிடும். அதனால், இந்த முறை, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தபால் ஓட்டுகளை கூடுதல் கவனத்துடன் பதிவு செய்தனர். வழக்கமாக, தபால் ஓட்டுகளில், திமுகதான் முன்னிலையில் இருக்கும். அதுபோலவே, இந்த முறையும் திமுக முன்னிலையில் வந்து, வெற்றி பெற்றுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையின் பெரும்பாலானோர் திமுகவுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டி உள்ளனர். இனி அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் நிலையில், தங்கள் துறை சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இந்த தபால் ஓட்டு முடிவில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications