“அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மகன் தலையீடு” செங்கோட்டையன் சொன்னதை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி
சென்னை: "அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மகனின் தலையீடு அதிகமாக உள்ளதால் அதிமுகவும் குடும்ப அரசியலுக்கு மாறிவிட்டது என்று செங்கோட்டையன் கூறி இருக்கலாம்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தரும் நிகழ்ச்சியானது கீரனூர் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

SIR தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை, அவசரப்பட்டு எஸ்ஐஆர் எடுக்கக் கூடாது. தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக யாருடைய வாக்கும் விடுபடாமல் எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம். எஸ்ஐஆர் தேவை என்று கூறி திமுகவிற்கு எங்கே அதிகமாக வாக்குகள் உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு உள்ள வாக்காளர்களை நீக்கிவிட்டு நாம் வெற்றி பெறலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
SIR தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை நாங்கள் எடுத்துக் கூறுவோம். அவசரப்பட்டு எஸ்ஐஆர் எடுக்கக் கூடாது என்று நாங்கள் வாதிடுவோம். பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்த பிறகு பூர்த்தி செய்து அதை மீண்டும் அவர்கள் வழங்காவிட்டால் அவர்களுடைய வாக்காளர் உரிமையை எஸ்ஐஆர் பறித்து விடும். திமுகவிற்கு வாக்காளர் பட்டியலில் எந்த போலி வாக்காளர்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகத் தான் நாங்கள் இதை கூறுகிறோம். பீகாரில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். இருப்பினும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். பாஜகவை பொறுத்தவரை பல டீம்கள் வைத்துள்ளனர். அதில் செங்கோட்டையன் தலைமையிலான டீமும் ஒன்று. திண்டுக்கல் சீனிவாசனுக்கு திராணியை பற்றி பேச தகுதியில்லை, ஆப்பிளை கையில் வைத்துக் கொண்டு மாம்பழம் என்று கூறுவார், இவர் எல்லாம் திராணியை குறித்து பேசலாமா?
கோடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. அது குறித்து விவரமாக பேச முடியாது. திமுக மீது எத்தனை குற்றச்சாட்டுகளை யார் மீது வைத்தாலும் மக்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள். கே.என்.நேருவைப் பொறுத்தவரை அவரது தொகுதியில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அது பாஜகவுக்கும் தெரியும், அதிமுகவுக்கும் தெரியும்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மகனின் தலையீடு அதிகமாக உள்ளதால் அதிமுகவும் குடும்ப அரசியலுக்கு மாறிவிட்டது என்று செங்கோட்டையன் கூறி இருக்கலாம்" என்றார் அமைச்சர் ரகுபதி.
முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், " இன்றைக்கு வருகிற பிரச்சினைகளை பார்க்கும் போது திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று இவருடைய (எடப்பாடி) அரசியலிலும் மகன், மாப்பிள்ளை, மைத்துனர் போன்றவர்களின் தலையீடுகள் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை" எனத் தெரிவித்தார்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications