திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம்
சென்னை: திமுக சிட்டிங் எம்எல்ஏவான ஜெ.கருணாநிதி, தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்தின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கான வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். சென்னை திநகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் கருணாநிதி, மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் சகோதரர் ஆவார்.
கருணாநிதி, சென்னை தென்மேற்கு திநகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் திநகர் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கருணாநிதி எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆனால் திநகர் தொகுதியில் போட்டியிட கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்கவில்லை, அவருக்கு பதிலாக திநகர் தொகுதி வேட்பாளராக திமுக எம்எல்ஏ அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் விரக்தியில் இருந்த கருணாநிதி, திநகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
தியாகராயர் நகர் கிழக்கு பகுதி செயலாளராக பல ஆண்டு காலம் கடுமையாக உழைத்துள்ளேன். அந்த உழைப்பிற்கும்,நேர்மைக்கும், கழகம் மேல் இருந்த பற்றிற்கும் தற்போது மதிப்பில்லாத காரணத்தினால் எனது கழக பகுதி செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

எனக்கு ஒத்துழைப்பு அளித்த கழகத் தலைவர் அவர்களுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த கழக பகுதி செயலாளர் பதவிக்கு கோ.சு.மணியை நியமித்து உத்தரவிட்டார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
இந்த நிலையில் தன்னை தலைமை அழைத்து சமாதானம் செய்யாததால் கருணாநிதி கவலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது அண்ணன் மகன் ராஜா அன்பழகனின் வெற்றி வாய்ப்புக்கு வேலை செய்யாமல் தவெக சார்பில் களமிறங்கும் புஸ்ஸி ஆனந்தின் வெற்றிக்கு பாடுபட கருணாநிதி முடிவு செய்துள்ளார் என்றும் அவருக்காக பிரச்சாரம் செய்வது என்றும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
இதை கருணாநிதி மறுத்துள்ளார். அவர் தனது எக்ஸ்சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "என்னை எந்த அரசியல் கட்சியுடன் இணைத்து பேசப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேர்ந்து செயல்படவில்லை, செயல்படவும் போவதில்லை." என தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications