என் பெயரே சரவணன்.. தங்கத்தேரை மீட்டது பெருமை.. பாஜகவுக்கு திமுக எம்எல்ஏ பதிலடி
சென்னை: என் பெயரே சரவணன்தான். தங்கத்தேரை மீட்ட பெருமை எனக்கு உண்டு என பாஜக நிர்வாகி சீனிவாசனுக்கு திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுபவர். அறுபடை வீடுகள் அமைத்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற YouTube சேனலில் தனிநபர் ஒருவர் கொச்சைப்படுத்தி இருந்த நிலையில் நாங்கள் எல்லாம் அங்கமாக இருக்கும் தி.மு.க சார்பாக, தலைமை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தும் தி.மு.க தொண்டர்கள் 1 கோடி பேர் இந்துக்கள் என்ற உண்மையை மறைக்க முயலும் காவி கூட்டத்திற்கு தெளிவுபடுத்திய பிறகும் பூத கண்ணாடி கொண்டு தேடினாலும் தெரியாத ஸ்ரீனிவாசன் போன்ற நபர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள மீண்டும் கையில் எடுத்திருப்பது வெட்கக்கேடானது.
அவர் கூற்றின்படி அறுபடை வீடுகளில் ஐந்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கவினர் என்பது உண்மை. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரானவுடன் முருகப்பெருமானின் தங்கத்தேரினை மீட்டெடுத்தது எனது முதல் செயல். என்னுடைய பெயரே முருகனின் பெயரான சரவணன் தான்.
தி.மு.க வேட்பாளர்களுக்கு அருள் பாலித்த முருகக்கடவுள் நோட்டா ஸ்ரீனிவாசன் போன்றவர்களுக்கு ஏன் அருள் பாலிக்கவில்லை? ஒருவேளை அவர்களின் போலி பக்தியை முருகக்கடவுள் ஏற்கவில்லையோ? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது தான் இறைத்தத்துவமோ?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள், அப்படி மக்களும், மகேசனும் அளித்த தீர்ப்பினை முருக பக்தர் என்று சொல்லிக் கொள்ளும் நோட்டா அவர்கள் ஏற்காமல் ராஜினாமா செய்ய வேண்டும், பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிதற்றுகிறார்.
உண்மையில் இவரைப் போன்ற போலிகள் தான் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் நண்பர் கடந்த தேர்தல் தோல்வியில் இருந்து மீளவில்லை போலும். அடுத்த தேர்தலில் டெபாசிட் திரும்பப் பெற வாழ்த்துக்கள் என்றார்.












Click it and Unblock the Notifications