Stalin Is More Dangerous ..கண்ணுக்கு கண்..பல்லுக்கு பல் - ஜெயக்குமார் கைது.. டி.ஆர்.பி. ராஜா ட்வீட்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, சென்னை ராயபுரத்தில் 49-வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக அதிமுக-வினர் புகாரளித்தனர்.
இதையடுத்து அந்த வாக்குச்சாவடிக்கு சென்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கள்ளஓட்டு போடவந்ததாக கூறப்பட்ட நபரை ஓட்டிப்போட விடாமல் தடுத்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த நபரை அரைநிர்வாணாக்கி தாக்கியதாக ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஜெயக்குமார் மீது புகாரளித்தார். இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

" வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு எல்லை மீறிச் செல்வார்கள் என்பதை அ.தி.மு.க ஆட்சியில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது நேரில் கண்டு அறிந்தவன் நான். முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார்.
கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்.:" எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மீது பெறப்பட்ட புகாரை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ-வும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, ஜெயக்குமார் கைது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், '' கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். Stalin Is More Dangerous. சொன்னா யாரு கேக்குறா'' என ட்வீட் செய்துள்ளார்.
திமுக நபரைத் தாக்கியதாக ஜெயக்குமார் குறித்து சர்ச்சை தொடங்கியதுமே ராஜா ட்வீட் செய்திருந்தார். அதில், ''ஜெயக்குமார் செய்த காரியத்துக்கு பலனை அனுபவித்தே தீரவேண்டும். திமுக இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும்.
அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம் என கழகத் தலைவர் சொல்லி இருக்கிறார். இனி கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்'' என ட்வீட் செய்திருந்தார். தற்போது ஜெயக்குமார் கைதுக்குப் பிறகும் இதைக் குறிப்பிட்டு மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications