Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Stalin Is More Dangerous ..கண்ணுக்கு கண்..பல்லுக்கு பல் - ஜெயக்குமார் கைது.. டி.ஆர்.பி. ராஜா ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ட்வீட் செய்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, சென்னை ராயபுரத்தில் 49-வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக அதிமுக-வினர் புகாரளித்தனர்.

இதையடுத்து அந்த வாக்குச்சாவடிக்கு சென்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கள்ளஓட்டு போடவந்ததாக கூறப்பட்ட நபரை ஓட்டிப்போட விடாமல் தடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அந்த நபரை அரைநிர்வாணாக்கி தாக்கியதாக ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஜெயக்குமார் மீது புகாரளித்தார். இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

DMK MLA TRB Raja tweeted about the arrest of former AIADMK minister Jayakumar.

" வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு எல்லை மீறிச் செல்வார்கள் என்பதை அ.தி.மு.க ஆட்சியில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது நேரில் கண்டு அறிந்தவன் நான். முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார்.

கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்.:" எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மீது பெறப்பட்ட புகாரை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ-வும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, ஜெயக்குமார் கைது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், '' கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். Stalin Is More Dangerous. சொன்னா யாரு கேக்குறா'' என ட்வீட் செய்துள்ளார்.

திமுக நபரைத் தாக்கியதாக ஜெயக்குமார் குறித்து சர்ச்சை தொடங்கியதுமே ராஜா ட்வீட் செய்திருந்தார். அதில், ''ஜெயக்குமார் செய்த காரியத்துக்கு பலனை அனுபவித்தே தீரவேண்டும். திமுக இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும்.

அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம் என கழகத் தலைவர் சொல்லி இருக்கிறார். இனி கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்'' என ட்வீட் செய்திருந்தார். தற்போது ஜெயக்குமார் கைதுக்குப் பிறகும் இதைக் குறிப்பிட்டு மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+