திமுக எம்பி, எம்எல்ஏக்கள் தாராளம்.. தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு.. ஒரு மாத ஊதியம் வழங்க முடிவு
சென்னை: தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை 'முதலமைச்சர் பொது நிவாரண நிதி'க்கு வழங்குவார்கள் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி கோரியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். பல்வேறு விஐபிகளும், சாமானிய மக்களும் கூட முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தபடி உள்ளனர்.
நடிகர் அஜித், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.50 கோடி வழங்கியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு இன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை 'முதலமைச்சர் பொது நிவாரண நிதி'க்கு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications