சொன்னதை செய்த கனிமொழி... வேண்டாம் CAA-NRC என வீட்டில் கோலமிட்டு எதிர்ப்பு
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது வீட்டில் ''வேண்டாம் CAA-NRC'' எனக் கோலமிட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் கோலமிடும் போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் கனிமொழி.
இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணியினர் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தங்கள் வீடுகளில் ''வேண்டாம் CAA-NRC'' என்ற வாசகத்துடன் கூடிய கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கைது
குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த 6 பெண்களை போலீஸ் நேற்று கைது செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கோலமிட கூட உரிமையில்லையா என மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியும் எழுந்தது.

தலைவர்கள்
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

விளம்பரம்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 6 பெண்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலமிடுவதே பல ஊடகங்களுக்கு தெரியாத நிலையில், அவர்களை போலீஸ் கைது செய்ததன் மூலம் கோலமிட்டும் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்ற விஷயம் விளம்பரமானது.

சமூக செயல்பாட்டாளர்கள்
இதையடுத்து சமூக செயல்பாட்டாளர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு முன்பு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டு அதை ட்விட்டர், இன்ஸ்டா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டனர். இதனால் கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் கடல் கடந்தும் நொடிபொழுதில் பரவியது.

திமுக மகளிரணி
இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மகளிரணியினர் வீடுகளில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என அந்த அணியின் செயலாளர் கனிமொழி நேற்று அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் வகையில் இன்று முதல் ஆளாக தனது வீட்டு வாயிலில் ''வேண்டாம் CAA-NRC'' எனக்கோலமிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications