பாஜகவால் பெண்களுக்கு பெருந்துயரம்.. மகளிர் இடஒதுக்கீடு 50 ஆண்டு ஆனாலும் நடைமுறைக்கு வராது- கனிமொழி
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய கனிமொழி மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் இந்த மாநாட்டில் தேசியளவிலும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும், பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே என பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய திமுக எம்பி கனிமொழி பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "மகளிர் உரிமை மாநாட்டிற்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு. இந்தியாவில் முதல்முறையாக காவல்துறையில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
படிக்கும் ஆர்வமுள்ள பெண்களுக்குக் கைதூக்கிவிட அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.. மகளின் முன்னேற்றத்திற்காக உரிமை தொகை வழங்கப்படுகிறது.. பாஜக ஆட்சியில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அதற்கு மணிப்பூர் உதாரணம்.. அங்கே பெண்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர் என்பதை நாங்களே நேரில் சென்று பார்த்தோம்.
இதே பாஜக குஜராத்தில் செய்த அட்டூழியங்களாலும் பாதிக்கப்பட்டது பெண்கள் தான்.. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியரசுத் தலைவரே அவமதிக்கப்படுகிறார்.. கோயில் முதல் நாடாளுமன்றம் வரை எங்கும் குடியரசுத் தலைவரையே இவர்கள் அனுமதிப்பதில்லை. புதுச்சேரியில் பட்டியலின பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்...
11 பெண் மேயர்களை கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.. பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது.. தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.. பாஜக ஆளும் மாநிலங்களில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இறுக்கிறது.
நாங்கள் உங்களிடம் வந்து யாசகம் கேட்கவில்லை எங்கள் உரிமைகளைக் கேட்கிறோம். அதற்குப் பெண்களான நாம் வலிமையாகக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications