நீலகிரி போல வேறு எங்கும் நடக்க கூடாது.. டிரோன்கள் பறக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தை நாடிய திமுக!
சென்னை : வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. மேலும், ட்ரோன்கள் பறக்கக் கூடாது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ இன்று மனு அளித்தார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் கடந்த 27ஆம் தேதியன்று இரவில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 20 நிமிடங்கள் செயலிழந்தன. மின் இணைப்பு பழுது காரணமாக சிசிடிவி கேமரா செயலிழந்திருக்கக்கூடும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ இன்று புகார் அளித்தார்.
பின்னர் திமுக எம்.பியும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீலகிரி பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து பதிவான வாக்குகளை வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் கடந்த 27ஆம் தேதி அன்று 20 நிமிடங்களுக்கு இயங்காமல் போனது. தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் இயங்கியதால் மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு இயங்கவில்லை என்று நீலகிரி தேர்தல் அதிகாரி கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஸ்ட்ராங் ரூமிலும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஸ்ட்ராங் ரூம்களிலும், சிசிடிவி கேமராக்கள் எந்த பழுதும் இல்லாமல் முழுமையாக இயங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கைக்காக ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்படும் வரை சிசிடிவிக்கள் முழுமையாக இயங்க வேண்டும். சிசிடிவி வீடியோ காட்சிகளை தேவைப்படும் போதெல்லாம் வேட்பாளர்களோ, வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் கேட்கும்போது தர வேண்டும் என மனு கொடுத்து உள்ளோம்.
ஸ்ட்ராங் ரூமை சுற்றி உள்ள இடங்களில் 500 மீட்டர் சுற்றவளவுக்கு எந்த ட்ரோன் போன்ற கருவிகளும் பறக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு உள்ளோம். ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள்ள மண்டலம் குறித்த உரிய அறிவிப்பை காவல்துறைக்கு அனுப்புவதாக மாநில தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். சிசிடிவி கேமராக்களை பழுது அடையாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியை கொடுத்து உள்ளார்.
எலெக்ட்ரிக்கல் ஷாட் சர்க்க்யூட் காரணமாக இது நடந்து உள்ளதாக கூறி உள்ளனர். எல்லா வேட்பாளர்களின் ஏஜெண்ட்களையும் அழைத்துச் சென்று காட்டி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
எங்கள் வேட்பாளரின் ஏஜெண்டுகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஸ்ட்ராங் ரூமில் உள்ள சீல்கள் சரியாக இருந்தது, அந்த இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரி சொல்லி உள்ள விளக்கம் எங்களுக்கு சரியானதாக படுகிறது” எனத் தெரிவித்துள்ளார் என்.ஆர்.இளங்கோ.
-
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications