ஆஹா.. 3 முனைகளில் தாக்க போகுதே திமுக.. பதட்டத்தில் பாமக.. தப்பி கரை சேருமா?
Recommended Video
சென்னை: பாமகவை நிர்மூலமாக்க திமுக தரப்பில் 3 முனைத் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த தாக்குதல் வியூகத்திலிருந்து பாமக தப்ப முடியாது என்று திமுகவினர் திடமாக நம்புகின்றனர்.
பாமக வரும் வரும் என்று கடைசி வரை நம்பிக் கொண்டிருந்தது திமுக. ஆனால் யூ டர்ன் போட்டு அதிமுக பக்கம் போய் விட்டார் டாக்டர் ராமதாஸ். இது திமுகவுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனால் பாமகவை வீழ்த்த கடுமையான வியூகங்களை திமுக வகுத்து வருகிறது.
தற்போது மும்முனை வியூகத்தை திமுக கையில் எடுத்துள்ளது. இதிலிருந்து பாமக தப்ப முடியாது என்பது திமுகவின் எண்ணமாக உள்ளதாம்.
சீட் கிடைக்காததற்கு இதுதான் காரணமா.. திமுகவிலிருந்து விலகுகிறதா மனித நேய மக்கள் கட்சி?
திமுக கூட்டணி முடிந்தது
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உடன்படிக்கை திமுக முகாமில் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தாரைவார்த்து விட்டு 20 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.
பாமகவுடன் நேருக்கு நேர்
அந்த 20 தொகுதிகளில் 5 தொகுதிகள் வரை பாமகவை எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாம் திமுக. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தன்னை அன்புமணி வம்புக்கு இழுத்ததை மறக்கவில்லையாம் மு.க.ஸ்டாலின்.
ரசிக்காத ஸ்டாலின்
மேலும், எடப்பாடியோடு ராமதாஸ் கைக்கோர்த்ததை திமுக முகாம் ரசிக்கவில்லையாம். பாமகவுக்கு டஃப் கொடுக்க திமுக தீவிர பணிகளை தொடங்கியுள்ளதாம்.
குரு - பாரிவேந்தர்
இதனிடையே மறைந்த குருவின் குடும்பத்தினர் ராமதாசுக்கு எதிராக வரிந்து கட்டியுள்ள நிலையில், பாரிவேந்தரும் பாமகவை ஜெயிக்கவிடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு களப்பணியை தொடங்கிவிட்டாராம்.
உறுதியளித்து சீட்
பாமகவை தோற்கடித்து காட்டுவேன் என்ற உறுதிமொழியை அளித்து தான் ஐ.ஜே.கே.வுக்கு ஒரு சீட்டே பெற்றாராம் பாரிவேந்தர். திமுக, குரு குடும்பத்தினர், பாரிவேந்தர் என்ற மும்முனைத் தாக்குதலில் இருந்து பாமக தப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ராமதாஸ் இதில் பெரிய கில்லாடி.. அவரும் எதிர்முனைத் தாக்குதல் திட்டத்தை வைத்திருப்பார் என்பதால் திமுகவும் அதிலிருந்து தப்புமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.