இபிஎஸ் - ஓபிஎஸ் வாய்ப்பில்லை ராஜா.. திமுகவின் பி டீம்.. நெருங்க விடாத ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் நேருக்கு நேராக சந்திக்க வாய்ப்பு இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை என இபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து முடியாத நிலையில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம் என்றும் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அதிமுகவின் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுப்பதாக கூறினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்காக வாக்கு சேகரிப்போம் என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையனுக்கு நன்றி என்று கூறினார்.

இதனிடையே ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் சந்திப்பார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார். இதனிடையே இன்று தேர்தல் அதிகாரியை சந்தித்த ஜெயக்குமார், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருவதாக புகார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழுமா என்று கேட்டனர். அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறக்கூடாது. அதிமுகவின் பி டீம் போல ஓ.பன்னீர் செல்வம் செயல்படுவதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications