Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவாலயத்தின் ரகசிய மூவ்.. ராஜ்ய சபா எம்பி ஆகும் அந்த 'பவர்ஃபுல்' மனிதர்? ஸ்டாலின் முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது ராஜ்யசபா தேர்தலை நோக்கித் திரும்பியுள்ள நிலையில், திமுக தரப்பிலிருந்து கசிந்துள்ள ஒரு தகவல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்துள்ளது. தமிழக அரசியலில் தற்சமயம் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒரு 'பவர்ஃபுல்' மனிதரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

tamil nadu assembly elections 2026 DMDK DMK

யார் அந்த நபர்?

அறிவாலய வட்டாரங்களில் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்தப் பெயர் குறித்துப் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. அவர் இப்போது பவர் சென்டராக இருக்கிறார். ஆனால் அதிகாரபூர்வமாக பொறுப்பில் இல்லை.
ஆளுங்கட்சி தரப்பில் மதிக்கப்படக்கூடிய ஒரு செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். தற்போது எந்த ஒரு அரசுப் பதவியிலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவப் பதவியிலோ இல்லாத அவர், டெல்லி அரசியலில் திமுகவின் குரலை வலுவாக ஒலிக்கச் செய்யக்கூடியவர் என நம்பப்படுகிறது.

ஏன் இந்த திடீர் முடிவு?

மக்களைத் தேடிச் செல்லும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தேசிய அளவில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிலைநாட்டவும், பாஜக-விற்கு எதிராக வலுவான வாதங்களை முன்வைக்கவும் ஒரு அனுபவம் வாய்ந்த 'ஹெவிவெயிட்' அரசியல்வாதி தேவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கருதுவதாகத் தெரிகிறது. அதோடு கட்சி நிர்வாக ரீதியாக அவரின் பணிகள் கவனம் பெறுவதாக திமுக அவரை டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம்.

ராஜ்ய சபா எம்பி தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2026-ல் 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதுள்ள சட்டமன்ற பலத்தின் அடிப்படையில், திமுக கூட்டணி இந்த 6 இடங்களில் 4 முதல் 5 இடங்களை எளிதாகக் கைப்பற்றும்.

இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், திமுக தனது வசம் உள்ள இடங்களில் இரண்டு இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கத் தயாராகி வருகிறது.

பதவி முடியும் 6 எம்.பி-க்கள் யார்?


தற்போது பதவி முடியும் 6 உறுப்பினர்களின் பட்டியல் இதோ:

திருச்சி சிவா (திமுக)

என்.ஆர். இளங்கோ (திமுக)

அந்தியூர் பி. செல்வராசு (திமுக)

டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு (திமுக)

எம். தம்பிதுரை (அதிமுக)

ஜி.கே. வாசன் (தமாகா)

மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) தேர்தல் என்பது நாம் வழக்கமாக வாக்களிக்கும் மக்களவைத் தேர்தல் போல நேரடியானது அல்ல, இது ஒரு மறைமுகத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க முடியாது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தான் வாக்களிப்பார்கள். ஒரு மாநிலத்தில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றனவோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப எம்.எல்.ஏ-க்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். இது "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை" என்ற அடிப்படையில் நடக்கும். அதாவது, ஒரு கட்சிக்கு எவ்வளவு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்தாற்போல் அவர்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்.பி-க்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

இதனை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்: தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இப்போது 6 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால், அவருக்குத் தோராயமாக 34 அல்லது 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும். ஒருவேளை திமுகவிடம் 130 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களால் தலா 34 வாக்குகள் வீதம் 3 எம்.பி-க்களை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியும். மீதமுள்ள வாக்குகளை வைத்துத் தனது கூட்டணிக் கட்சியான தேமுதிக-வின் எல்.கே. சுதீஷ் போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து அவரையும் வெற்றி பெற வைக்க முடியும். எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு 1, 2, 3 என முன்னுரிமை அடிப்படையில் வாக்களிப்பார்கள், அதிக முன்னுரிமை வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+